மனோஜ்க்கு கிடைத்த ஐடியா, வார்னிங் கொடுத்த முத்து,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிட்டியிடம் ரோகிணி உதவி கேட்க, முத்து பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிருஷ் திட்டிக் கொண்டிருக்க மீனா அவன் யார் பெற்ற குழந்தையா இருந்தா என்ன குழந்தை தானே எதுக்காக என்று கேட்கிறார் உன் புருஷன் என்ன ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாத்திட்டான்றதுக்காக நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என்று கேட்க வேணா நீங்க அவர்கிட்ட எப்ப போவான்னு கேட்டு போங்க என்று சொல்ல விஜயா யாருமே என் பேச்சை மதிக்கிறதே இல்லை என்று கோபப்பட்டு வெளியில் வருகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ரோகிணி சிட்டிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லிவிட்டு ரதி குடும்பத்தை மிரட்ட சொல்லிக் கேட்கிறார். சரி நான் அப்படி பண்ணா எனக்கு என்ன கொடுப்பீங்க என்று கேட்க எனக்கு உதவியா செய்ய மாட்டியா என்று கேட்க அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்லுகிறார்.

நான் உனக்காக எவ்வளவு உதவி பண்ணி இருக்கேன் இது எனக்கு பண்ண மாட்டியா என்று கேட்க நம்ம தொழில்ல உதவியே கிடையாது என்று சொல்லிவிட்டு, ஆபீஸ்க்கு டிவியும் ஏசியும் தேவைப்படுது அதனால நீ அதை கொடுத்துட்டு என்று சொல்ல ரோகிணியும் வேறு வழி இல்லாமல் சம்மதித்து விடுகிறார். மறுபக்கம் ஷோரூமுக்கு வந்து நான் இந்த விஷயத்தை சமாளிக்க ஒருத்தர் கிட்ட பேசி இருக்கேன் என்று சொல்ல பணம் கேட்க மாட்டாங்களா என்று மனோஜ் கேட்கிறார். பணம் கேட்கல அதுக்கு பதில் டிவியும் ஏசியும் கேட்டிருக்காங்க என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைந்து யார் கேட்டு கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு வந்த என்று கோபப்படுகிறார்.முத்து கிட்ட பிரச்சனை தீர்க்க சொல்லி பேச சொல்லி இருக்கீங்க என்று சொல்ல நீ முத்துகிட்ட சொன்னது என்கிட்ட சொல்லல ஏற்கனவே வியாபாரம் டல்லா இருக்கு இந்த டைம்ல நீ இப்படி பண்ணா டீலர்க்கு எப்படி பணம் கொடுக்கிறது என்று கோபப்பட்டு மனோஜ் நின்று கொண்டிருக்க கடையில் வேலை செய்யும் ராஜா ஒரு ஐடியா சொல்லுகிறார்.

அதாவது அவங்க ஊரில் ஒரு கடையில் இது மாதிரி வியாபாரம் இல்லாத நேரத்தில் சீட்டு கட்டி பொருள் எடுக்கும் படி ஒரு திட்டம் போட்ட பிறகு நிறைய பேர் வந்து பணம் கட்டி பொருள் வாங்கினாங்க என்று சொல்ல மனோஜ் ரோகிணி இருவரும் இது நல்ல ஐடியா ஆடி மாசம் இருக்கு. நல்லா பிக்கப் ஆகும் இதை உடனடியாக சென்றுவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். மறுபக்கம் சிட்டியின் ஆட்கள் தீபன் குடும்பத்தை மிரட்ட வர அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். முத்துவின் காரை பார்த்த பிறகு இவர்கள் மறைந்து கொள்கின்றனர்.

உள்ளே சென்று எதுக்காக எங்க அம்மாகிட்ட பணம் கேட்டு இருக்கீங்க என்று சொல்ல உங்க அம்மா நம்பி தானே நாங்க என்னோட பையனை அனுப்பிச்சோம் என்று சொல்ல ஒரு ஹோட்டலில் ரூம் போடுறீங்க அங்க தப்பு பண்ணிட்டாங்க அப்ப ஹோட்டல் கார்கெட்ட போய் கேப்பீங்களா என்று முத்து கேட்க ஒரு கட்டத்திற்கு மேல் பணம் ரூபா கூட கொடுக்க முடியாது என முத்து சொல்ல அப்போ அந்த இடத்தை அசிங்கப்படுத்தி உங்க அம்மா தப்பான தொழில் செய்றாங்கன்னு சொல்லுவோம் என்று சொல்லமுத்து கோபப்பட்டு அடிதடி ஆகிறது உடனே இனிமே வீட்டு பக்கம் பணம் என்று வந்தீங்கன்னா கல்யாணம் நடக்குற இடத்துல வேற எதுனா நடக்கும் என சொல்லி மிரட்டி விட்டு சென்று விடுகிறார் உடனே சிட்டி ஆட்கள் இதுதான் வாய்ப்பு என பயன்படுத்தி முத்துவின் பெயரைச் சொல்லி அவர்களை அடித்து விடுகின்றனர். மறுபக்கம் அண்ணாமலை நம்ம கிட்ட எதுக்கு பணம் கேட்கிறார்கள் என்று பேசிக்கொண்டு இருக்க ரவி எல்லாம் இந்த மனோஜால தான் என்று சொல்ல உன்ன அமைதியா இருக்க சொன்ன இல்ல என்று அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். உடனே முத்து வர என்ன நடந்தது என்று கேட்க முத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? என்ன நடக்கிறது? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Gatta Kusthi 2 Trailer

Gatta Kusthi 2 Trailer | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…

7 hours ago

Nachindhi Machanane Lyric Video

Nachindhi Machanane Lyric Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Gv Prakash

7 hours ago

The Dark Heaven Official Trailer

The Dark Heaven Official Trailer | Sidhu Sid | Tharshika | Rithvika | Balaaji

7 hours ago

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

1 day ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

2 days ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

2 days ago