siragadikka asai serial episode update 12-03-26
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி மனோஜ்க்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல ரோகினி கடுப்பில் டேபிளை தூக்கி அடிக்கிறார் அது எப்படி நடக்கும் நான் இன்னும் டைவர்ஸே கொடுக்கல எப்படி மனோஜ்க்கு கல்யாணம் பண்ணுவாங்க நான் அத நடக்க விடமாட்டேன் என்று சொல்லுகிறார் சிந்தாமணி அவங்க ரொம்ப பெரிய இடம் போல இந்த கல்யாணத்தை நடத்தாமல் விடமாட்டாங்க என்று சொல்ல அப்படி எல்லாம் என்னோட மனோஜ் விட்டு கொடுக்க முடியாது அந்த பிசினஸ் ஆரம்பிச்சு ஒரு தொழிலதிபரா மனோஜ் வரவச்சது நானே அது எப்படி என்னால விட்டுக் கொடுக்க முடியும் என்று கேட்கிறார் உடனே சிந்தாமணி அவங்க இன்னும் உங்களுக்கு டைவர்ஸ் விஷயத்த பத்தி பேசல அப்படி பேசியோ அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா கண்டிப்பா நீ அந்த பொண்ணு வீட்ல போயிட்டு இந்த மாதிரி எங்களுக்கு கல்யாணம் ஆயிருக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேங்கிற விஷயத்தை சொல்லிடு என்று சொல்ல ரோகிணி அதுவும் கரெக்ட் தான் ஆண்ட்டி அவங்க மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்பந்தமான சொல்லி எல்லாரையும் ஜெயில்ல உட்கார வச்சிருவேன்னு சொல்லுவேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் அண்ணாமலையும் மனோஜ் ரவி வீட்டில் இருக்க முதலில் முத்து வேகமாக ஓடி வந்து ஒரு சந்தோஷமான விஷயம் நான் வேன் வாங்க போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜயாவும் சந்தோஷமாக ஓடி வந்து நாம் மனோஜ்க்கு பொண்ணு பார்த்து இருக்கேன் என்று சொல்ல இருவரும் மாற்றி மாற்றி அவர்களது விஷயத்தை சந்தோஷமாக சொல்ல அண்ணாமலை இருவரையும் உட்கார வைத்து உனக்கு என்ன நீ முதல்ல வேன் வாங்க போற விஜயா உனக்கு என்ன மனோஜ்க்கு பொண்ணு பாத்திருக்க அதுதானே என்று சொல்லுகிறார்.
உடனே முதலில் முத்துவிடம் நீ கார் வாங்கப் போறது நல்ல விஷயம்தான் உன் தொழில நீ முன்னேறிக்கிட்டே போற என்று சொல்லுகிறார். இது மட்டுமில்லாமல் இந்த நான் வாங்குவதற்கு முக்கிய காரணமே மீனா தாம்பா என்று சொல்லுகிறார். உடனே அதை விடுங்க நான் மனோஜ்க்கு ஒரு பொண்ண பார்த்து இருக்கேன் ரொம்ப வசதியான இடம் கார் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்ல மனோஜ் சந்தோஷப்படுகிறார். அவகிட்ட மனோஜ்க்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிட்டியா என்று சொல்ல அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் அவங்க வந்து மனோஜ் பாக்கட்டும் அவங்களுக்கு பாத்தாலே மனோஜ் பிடிச்சிடும் நம்ம அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்லுகின்றனர் ஆனால் அண்ணாமலை இந்த உண்மைய சொல்றதுதான் நல்லது என்று சொல்லுகிறார் இதுமட்டும் இல்லாமல் நாளைக்கு அவங்க நம்ம வீட்டுக்கு வராங்க என்று சொல்ல, முத்து அப்பன் நாங்க ரெண்டு பேர் இருக்கும்போது எங்க பொண்டாட்டி எங்கன்னு கேட்டா என்ன சொல்றது என்று கேட்க அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதான் என்று விஜயா சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் நீங்க ரெண்டு பேரும் வீட்ல இல்லாம இருந்தாலும் நல்லா தான் இருக்கும் என்று விஜயா சொல்லுகிறார் உடனே அண்ணாமலை நானாவது வீட்டில் இருக்கலாமா வேண்டாமா என்று கேட்க மனோஜ் விஷயத்துல நான் சொல்றத மட்டும் செய்யுங்க என்று சொல்ல முத்துவும் நான் இருந்தா என் வாய் சும்மா இருக்காது ஏதாவது உண்மையை சொல்லிக்கிட்டு இருப்பேன் அம்மாவுக்கு கடுப்பாகும் நான் வரல நான் சவாரிக்கு போயிட்டு மீனாவுடன் கடைக்கு போயிடுறேன்.ரவி ஹோட்டல்ல சுருதி கூட இரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் சந்திரா கேசரி செய்து கொண்டிருக்க மீனா வருகிறார். அப்போதுதான் சத்யாவின் பிறந்த நாள் என தெரிய வருகிறது உடனே சீதாவும் அந்த கிப்ட் கொடுத்து சத்யாவுக்கு வாழ்த்து சொல்ல கொஞ்ச நேரத்தில் முத்துவும். சத்யாவுக்கு ஷர்ட் கொடுத்து வாழ்த்து சொல்லுகிறார் உடனே சந்திரா கேசரியை அனைவருக்கும் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து ரேகா வருகிறார். கேக் வாங்கிக் கொண்டு வருவதை பார்த்தவுடன் சரி நம்ம கேக் வெட்டி கொண்டாடிடலாம் என்று முடிவு எடுத்து குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி சத்தியா பிறந்த நாளை கொண்டாடுகிறார். உடனே சீதா கிளம்பி விட ரேகாவும் எனக்கும் கொஞ்சம் ஆபீஸ்ல வேலை இருக்கு நீங்க ஆபீஸ் வந்திடுவீங்களா என்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறார் அப்போது சந்திரா அக்கம் பக்கம் வீட்டுக்கு போய் கேக் கொடுத்துட்டு வந்துடறேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.
அப்போது சத்யாவிடம் ரேகா இன்னைக்கு டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நம்ம ரெண்டு பேர் போகலாம் இன்னைக்கு உங்களோட ரிசல்ட் சொல்லிடுவீங்கன்னு நம்புகிறேன் என்று சொல்லுகிறார். இதனை கவனித்த முத்து மீனா சத்யாவிடம் என்ன கேட்கின்றனர்? அதற்கு சத்யாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…