siragadikka aasai serial episode update 25-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியும் மீனாவின் கிச்சனில் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த ரோகினி மீனாவிடம் நீங்க எதுக்கு பணம் கொடுக்கிறேனு சொன்னிங்க மாமா கிட்ட நல்ல பெயர் எடுக்கவா என்று கேட்டு நீங்க எதுக்கு அத்தைக்கு பணம் கொடுக்குறீங்க நல்ல பேர் எடுக்கவா என்று கேள்வி கேட்டு பல்பு கொடுக்கிறார்.
மனோஜ் பிசினஸ் பண்ணாரு அதனால நாங்க சொன்ன பணத்தை கொடுக்க முடியும் ஆனா உங்களால் எப்படி கொடுக்க முடியும் என்று விஜயா கேட்க இத்தனை மாதமா என் புருஷன் தான் இந்த வீட்டுக்கு பணம் கொடுத்துட்டு இருந்தது. அதை மறந்துடாதீங்க என மீண்டும் பதிலடி கொடுக்க பல்பு மேல் பல்பு வாங்கி வெளியே வருகிறார் ரோகினி.
அடுத்ததாக அண்ணாமலை என்ஜினியரை வரவைத்து அளவெடுக்க ரூம் கட்ட 5 லட்சம் ஆகும் என்று சொல்லிவிட்டு செல்ல பணத்துக்கு என்ன செய்வது என எல்லோரும் கூட்டு சேர்ந்து பேச அண்ணாமலை பாத்திரத்தை வைத்து விடலாம் என்று சொன்ன விஜயா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இவங்களுக்கு எதுக்கு ரூம் குடிசை கட்டி விடுங்க போய் அதுல இருக்கட்டும்.. இவ என்ன மாளிகையில் இருந்தா வந்தா என்று கேள்வி கேட்க மீனா நான் மாளிகையில் இருந்து வரல தான்.. மாளிகையில வாழனும்னு ஆசையும் படல, எனக்கு குடிசையில் இருந்தா கூட சந்தோஷம்தான் நல்ல மனசு இருந்தா எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்க முடியும் என பதிலடி கொடுக்கிறார். இதனால் விஜயா என் வீட்டு பத்திரத்தை யாருக்காகவும் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்கிறார்.
மீனாவின் அப்பா ரயிலில் அடிப்பட்டு செத்த பழைய கதையை மீண்டும் எடுத்துப் பேச அண்ணாமலை இப்போது நிறுத்தறியா என்று எல்லாரும் முன்னாடி விஜயாவை கண்டிக்கிறார். இது ஒரு ரூம் கட்ட எதுக்கு இப்படி பேசறாங்க உங்க அம்மா மீனா வீட்டுக்கு எப்ப பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க என்கிட்ட எல்லாம் இப்படி பேசினா வாயிலையே ஸ்டாப்ளர் போட்டுவிட்டு இருப்பேன் என்று கோபப்படுகிறார்.
அடுத்ததாக ஸ்ருதி மூலம் வீட்டில் நடந்த விஷயத்தை அறியும் சுதா ஐந்து லட்சம் பணத்தை கொண்டு வந்து குடும்பத்தை பிரிக்க பிளான் போட்டு கிளம்பி வருகிறார். வீட்டுக்கு வந்த சுதா இந்த வீட்ட கட்டவே எங்க வீட்டுக்காரர் தானே லோனுக்கு ஏற்பாடு பண்ணாரு என பேச்சுக் கொடுத்து பிரச்சினையை தொடங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…