வாசுதேவன் போட்ட பிளான், சிக்கி தவிக்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பியூட்டி பார்லர் இன் விஜய் உங்க அப்பா மட்டும்தான் வருகிறார் அந்த டிக்கெட் வருதா என்று கேட்க ரோகிணி அப்பா மட்டும்தான் வராது என்று சொன்னது விஜயா ஆமா உங்க அம்மா இருந்திருப்பாங்க பாவம் அவங்க தான் அல்பாய்ஸ் ல போய்ட்டாங்களே என்று சொல்ல ரோகிணி அம்மாவின் முகம் மாறுகிறது.

இதைத் தொடர்ந்து விஜயா எனக்கும் மேக்கப் போட்டு விடு என்று சொல்ல ரோகிணி வீட்டில் வந்து போடுறேன் என்று சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து ரோகினியின் அம்மா வீட்டுக்கு கிளம்புகிறார். அடுத்ததாக வாசுதேவன் பேமிலி தாலி பிரித்து போடும் பங்ஷனுக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து மண்டபத்தில் காத்திருக்க விஜயா அண்ணாமலை குடும்பத்துடன் வருகின்றனர்.

முத்து காரை பார்க் பண்ணு போக மீனா நீங்களும் வந்துருங்க ஒண்ணா போகலாம் என்று காத்திருக்க மற்றவர்கள் மேலே வர வாசுதேவன் அண்ணாமலையை பார்த்து வா அண்ணாமலை என்று மரியாதை இல்லாமல் கூப்பிட எல்லோரும் திகைத்து நிற்கின்றனர். பிறகு வாங்க அண்ணாமலை என்று கூப்பிட்டு சமாளிக்கிறார்.

அடுத்ததாக முத்து மற்றும் மீனா வர முத்துவை பார்த்து இவர்கள் கடுப்பாக முத்து கையை கூப்பி வணக்கம் போட்டு கடுப்பேத்துகிறார். பிறகு ஸ்ருதி தன்னை ரெடி பண்ண மீனாவையும் ரூமுக்கு கூப்பிட அவருடைய அம்மா மீனாவை எதுக்கு டிஸ்டர்ப் பண்ற என்று சொல்லி ஸ்ருதியை அழைத்துச் செல்கிறார்.

மீனா மழையை உட்காரக் கூப்பிட முத்து மீனாவை கூட்டிக்கொண்டு பின்னாடி வந்து உட்காருகிறார். மௌன விரதம் போல் எதுவும் பேசாமல் ஒரே இடத்தில் பார்க்க என் கிட்ட கூட பேச மாட்டீங்களா என்று கேட்கும் மீனா முத்துவை பார்த்து சிரிக்கிறார். அடுத்ததாக வாசுதேவன் தன்னுடைய நண்பர் ஒருவரை வரவழைத்து அண்ணாமலை பக்கத்தில் உட்கார வைத்து அவரது சு அண்ணாமலை மீது படுமாறு உட்கார சொல்கிறார்.

மறுபக்கம் விஜயா சம்மந்தி எங்க இன்னும் வரலையா என்று ரோகினியை டார்ச்சர் செய்கிறார். முத்துவை குடிக்க வைத்து அவ மூட மாத்திட்டா பெரிய பிரச்சனை பண்ணிடுவான் என வித்யாவுடன் சேர்ந்து பிளான் போடுகிறார்.

அண்ணாமலை பக்கத்தில் உட்கார்ந்தவர் கால் தன் மீது படுவதால் வாசுதேவனின் பிளானை புரிந்து கொண்டு அங்கிருந்து எழுந்து வருகிறார். ரோகினியும் வித்யாவும் பேசிக்கொண்டிருக்க திடீரென மனோஜ் வந்துவிட யாரைப் பத்தி பேசிட்டு இருந்தீங்க என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்க அப்பாவை பற்றி தான் என்று சொல்லி சமாளிக்கின்றனர். வாசுதேவனும் அவரது மனைவியும் முத்துவை வைத்து பிரச்சனை செய்ய திட்டம் போடுகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 25-03-24
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

11 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

11 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

11 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

11 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

13 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

1 day ago