RP Chaudhary warns in Vishal case
சக்ரா திரைப்படத்தை தயாரிப்பதாக நடிகர் விஷால், ஆர்.பி.சவுத்ரியிடம் பணம் பெற்று இருந்தார். அதற்கு பிணையாக சில ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பணம் கொடுத்த பின்பும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அந்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஆர்.பி.சவுத்ரி, அந்த ஆவணங்களை கொடுத்து வைத்திருந்த அவரது மேலாளர் சிவக்குமார் மறைந்து விட்டதாகவும், நடிகர் விஷால் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு முன்பு தன்னிடம் ஒருமுறை ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இதுநாள் வரையிலான தன்னுடைய திரை அனுபவத்தில், பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் ஆர்.பி.சவுத்ரி அப்போது குறிப்பிட்டுள்ளார்.
விஷாலின் ஆவணங்களை சிவக்குமார் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருந்தால், அதனை உடனடியாக திருப்பி கொடுக்குமாறும், அதனை பயன்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…