நரிக்குறவர் குடும்பத்தை ரோகிணி திரையரங்கில் அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்? திரையரங்கம் கொடுத்த விளக்கம்

சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றாக விளங்கி வரும் ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். அதேபோல் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் தனது குழந்தைகளுடன் பத்து தல திரைப்படத்தை காண வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரோகினி திரையரங்கின் நிர்வாகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்திருந்தது வைரலாகி வருகிறது, அதில் அவர்கள், “பத்து தல படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படங்களை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் வந்திருந்தவர்களில் 2 வயது, 6 வயது, 8 மற்றும் 10 வயதில் குழந்தைகள் இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க எங்கள் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த ஆடியன்ஸ் ஒன்றுகூடி அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என குரல் எழுப்பி கொந்தளித்தனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல் தவிர்க்கும் வகையில், அந்த குடும்பத்தினரை படம் பார்க்க அனுமதித்தோம்” என அந்த அறிக்கையில் ரோகிணி திரையரங்கத்தில் நிர்வாகம் குறிப்பிட்டதுடன் அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் தியேட்டரில் அமர்ந்து பத்து தல படம் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

jothika lakshu

Recent Posts

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

3 hours ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

3 hours ago

குழந்தை பிறப்பை முன்கூட்டியே திட்டமிட்ட சமந்தா… வைரலாகும் பழைய பேட்டி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…

3 hours ago

‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்… அஸ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

3 hours ago

‘கருப்பு’ படத்திற்கு விஜய் தான் முதல் காரணம்… சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…

3 hours ago

மீண்டும் இணையும் ‘பிரேமம்’ கூட்டணி… நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…

3 hours ago