சந்தியாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி. சந்தியா எடுத்த முடிவு. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா கௌரி மேடம் சொன்ன வார்த்தையை மீறியதால் அவருக்கு பனிஷ்மென்ட் இருக்கு என சொல்கிறார். உங்கள காப்பாற்றுவதற்காக தான் நான் அப்படி செய்தேன் என சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது என கௌரி மேடம் கூறுகிறார்.

உனக்கு இந்த பனிஷ்மென்ட் இல்லாம இருக்கணும்னா நீ இந்த ஐந்து டார்கெட்டையும் சரியா சொல்லணும் என டாஸ்க் கொடுக்க சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இதுல ஒரு டார்கெட் தவறினாலும் நீயும் அப்துலும் இந்த கேம்ப விட்டு வெளியே தான் போகணும் என கூறுகிறார். அதன் பிறகு சந்தியா அனைத்து டார்கெட்டையும் சரியாக முடிக்க பனிஷ்மென்ட் இல்லாமல் தப்பிக்கிறார்.

மறுபக்கம் சிவகாமி கடைவீதிக்கு சென்று வரும்போது அக்கம் பக்கத்தினர் சிலர் இப்படி ஒற்றுமையாய் இருந்த உன் குடும்பம் தேர்தல்ல இப்படி நேருக்கு நேரா போட்டி போடுதை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இன்னும் தேர்தல் முடிவு வந்தால் என்ன நடக்குமோ என சொல்லு சிவகாமி அதே பயத்துடன் வீட்டுக்கு வந்து சரவணன் செந்திலை அழைத்து நீங்க என்ன வேணா பண்ணுங்க ஆனா தேர்தல் விஷயங்கள் எல்லாம் இந்த வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு வந்துடனும். இந்த வீட்டில நீங்க எப்பவும் போல ஒற்றுமையான அண்ணன் தம்பியா மட்டும் தான் இருக்கணும், அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் மனுஷியாக இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறார்.

அடுத்து கௌரி மேடம் ஒரு மெசேஜ் வருகிறது. அதில் கேம்பை சுற்றி சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக தெரியவர கௌரி மேடம் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார். பிறகு இரவில் சந்தியா சரவணனுடன் போனில் பேசிக் கொண்டிருக்க திடீரென ஏதோ ஒரு விசில் சத்தம் கேட்க சந்தியா விளக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குள் தனியாக செல்கிறார்.

அங்கே மனிதர்கள் காலடியை பார்க்கிறார் பக்கத்தில் ஒரு லெட்டர் இருக்கிறது. அதில் நீங்கள் நினைத்ததை தைரியமாக செய்யுங்கள் என எழுதி இருக்க சந்தியாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
jothika lakshu

Recent Posts

செம்பருத்தி பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!

செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

16 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.!!

ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…

20 hours ago

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்..!

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…

21 hours ago

ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த முடிவால் வருத்தப்படும் ரசிகர்கள்.!!

ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…

22 hours ago

விஜயா முத்துவை வெறுக்க காரணம் என்ன? மீனாவிடம் உண்மையை சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…

22 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

22 hours ago