சந்தியாவிற்கு சிவகாமி போட்ட கண்டிஷன்.. ஆதியால் கண் கலங்கிய அப்பா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வள்ளி ஊருக்கு கிளம்ப அப்போது சந்தியா எப்போ இப்படி ஒரு குழந்தையை பெற்றுக் கொடுப்பாளோ? ஆனா அவ போலீசாக போறேன் ஊரை மிரட்ட போறேன்னு இருக்கா. போலீசான போஸ்டிங் எங்க வேணாலும் போடுவாங்களாம் ஆனா நீ அவளை இந்த தென்காசியை விட்டு அனுப்பக்கூடாது என கூறுகிறார். சிவகாமி நான் பாத்துக்குறேன் அத்தை என சொல்லி பிறகு வள்ளி ஊருக்கு கிளம்பியதும் அத்தை சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. எக்காரணத்தைக் கொண்டும் தென்காசியை விட்டு போக கூடாது என சொல்ல வேறு வழியில்லாமல் சந்தியா ஒத்துக் கொள்கிறார்.

அதன் பிறகு சிவகாமி பார்வதியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனா செக்கப் போரதா சொன்னா அவ கிளம்பிட்டாளா என கேட்க மயிலு அர்ச்சனாவை அழைத்து வர செந்திலை கூட்டிக்கொண்டு போவதாக சொல்ல பார்வதியை கூட்டிட்டு போக சொல்கிறார். ஆனால் அர்ச்சனா தயங்க அதன் பிறகு அவள் ஆசையை புரிந்து கொண்டு சிவகாமி சரி அவனை கூட்டிட்டு போயிட்டு வா என அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு ஆதி ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருக்க அந்த வழியாக வரும் ரவி ஆதியும் ஜெஸ்ஸி அப்பாவும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டதை பார்த்து தானும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என ஆசைப்பட்டு ஆதியிடம் சென்று இங்கிலீஷ் பேச அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். உனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை, அவர் படித்தவர் நீ கிராமத்தான் உனக்கும் அவருக்கும் வித்தியாசம் இருக்கு தேவையில்லாதது எல்லாம் ஆசைப்படாத என கூறுகிறான். அவர் முன்னாடி பேசி என் மானத்தை வாங்காதே என ஆதி சொல்ல கண் கலங்குகிறார்.

பிறகு அவர் வைத்திருந்த மாதிரியே ஒரு போன் எனக்கும் ஒண்ணு கம்மியான விலையில் வாங்கித் தாடா என சொல்ல ஆதி அத வச்சுட்டு நீங்க என்ன பண்ண போறீங்க உங்களுக்கும் அதை யூஸ் பண்ண தெரியாது அம்மாவுக்கு யூஸ் பண்ண தெரியாது என படிக்காதவன் என்று அசிங்கப்படுத்துவது போல பேச இதை கேட்ட சந்தியா பிறகு மாமனாரை சமாதானம் செய்கிறார். உங்களுக்கு நான் போன் வாங்கி தரேன் உங்கள இங்கிலீஷ் பேச வைக்கிறேன் என சந்தியா சொல்கிறார்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani2 serial episode update 14-09-22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

5 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

5 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

8 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

8 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

8 hours ago