Raja Rani2 Serial Episode Update 02.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் சரியாக அர்ச்சனாவின் தங்கச்சியை பார்க்கிறார் சந்தியா. சந்தியாவை பார்த்த ப்ரியா உடனே அக்கா எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என சொல்கிறார். நான் நல்லா இருக்கேன் நீயும் நல்லா இருக்கேன்னு பார்க்கும்போதே தெரியுது என சந்தியா கூறுகிறார்.
பிறகு இந்தப் பக்கமா வந்தேன் அதான் அத்தை மாமாவை பார்த்து அம்மா பத்தி சொல்லிட்டுப் போகலாம்னு வீட்டுக்கு போயிட்டு வரேன் என கூறுகிறார். எந்த ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்கன்னு சொன்னீங்க என சந்தியா யோசிக்க ஆர்எஸ் ஹாஸ்பிடல் என பிரியா கூறுகிறார். அதன்பிறகு நல்லா இருக்கவங்கள ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க என சந்தியா சொல்ல பிரியா அதிர்ச்சி அடைகிறாள்.
உடனே அங்கிருந்து கிளம்பி ஆகணும் அவர் நைசாக எஸ்கேப் ஆக அவரை பிடித்து நிற்க வைக்கிறார் சந்தியா. எங்க அத்தை மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தது யாருன்னு தெரிஞ்சிடுச்சு அவங்க பேரு பிரியா. அந்தப் பிரியா நீ தானே என பிரியாவின் மெயில் ஐடியை கூறி மேலும் அதிர்ச்சி கொடுக்கிறார். அக்கா எனக்கு எதுவும் தெரியாது என நீங்க சிக்கவைக்க பார்க்கிறீர்கள் என பிரியா கூறுகிறார்.
போலீஸ் வந்து கைது பண்ணிட்டு போகப் போறாங்க என சொல்ல பயந்து போய் உண்மைகளை உளறி விடுகிறான் பிரியா. அக்காவும் அம்மாவும் சொல்லி தான் செஞ்சேன் எனக்கு வேற எதுவும் தெரியாது என விட்டுடுங்க எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு என கூறுகிறார். துருவித் துருவி சந்தியா கேள்வி கேட்க எதுவாக இருந்தாலும் குற்றாலத்திற்கு போய் இருக்க எங்க அக்கா வந்ததும் கேட்டுக்கங்க என அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த பக்கம் செந்திலும் அர்ச்சனாவின் தங்கியிருக்கும் லாட்ஜுக்குள் போலீஸ் புகுந்து விடுகிறது. ஒவ்வொரு அறையாக சென்று உள்ளே இருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். அர்ச்சனாவும் செந்திலும் அப்போதுதான் ரொமான்ஸ் செய்ய தொடங்குகின்றனர்.
இந்த பக்கம் வீட்டுக்கு வந்த சந்தியாவிடம் சிவகாமி போன வேலை நல்லபடியா முடிஞ்சதா எனக்கேட்க அவர் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் சொன்னதால் முழுசா முடிஞ்சிடுச்சா என கேட்க அவர் என்ன சொல்லி சமாளித்தார் என தெரியாமல் சந்தியா திருதிருவென இருக்கிறார். இந்த நேரத்தில் சரவணன் கரெக்டாக வீட்டிற்கு வந்து சந்தியாவை காப்பாற்றி விடுகிறார்.
அதன்பிறகு சந்தியா அர்ச்சனா இதுவரை செய்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் நினைத்து பார்க்கிறார். நேரா அர்ச்சனாவிற்கு பேசுறதா இல்ல இந்த பிரச்சனையே வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்றதா என யோசிக்கிறார் சந்தியா. எது பண்ணாலும் அதுல ஒரு சிக்கல் இருக்கு என யோசித்துக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…