raja-rani-2 serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் அதிகாரிகள் அப்துல் தான் குற்றவாளி என நினைத்து அவரிடம் இருந்து தீவிரவாதிகள் குறித்த உண்மையை வெளியே கொண்டு வர கொடுமைப்படுத்துகின்றனர்.
ஒரு கட்டத்தில் சந்தியா உள்ளே புகுந்து அப்துல் நிரபராதி என சொல்ல போலீஸ் சந்தியாவை திட்டி வெளியே அனுப்புகிறது. இதனால் சந்தியா சரவணன் இடம் கண்டிப்பாக அப்துல் குற்றவாளி கிடையாது, அவர அடிச்சு கொன்னுடுவாங்க போல கண்டிப்பா இதை தடுத்து நிறுத்தணும் அதுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது சேட்டன் அடிக்கடி போனை எடுத்து பார்ப்பதால் சந்தியா சந்தேகப்பட்டு அவரிடம் பேச்சு கொடுக்க செல்கிறார்.
அதன் பிறகு எல்லோரையும் ஒன்றாக கூட்ட போலீஸ் அதிகாரிகள் யாரை கேட்டு எல்லாரையும் ஒன்றாக நிற்க சொன்னிங்க என்ன விஷயம் என சத்தமிட பயிற்சி கொடுக்கும் போலீஸ் மேல் அதிகாரிகளிடம் ரகசியம் ஒன்றை சொல்ல பிறகு சந்தியா பேச தொடங்குகிறார்.
இந்த கூட்டத்துக்குள் தான் கருப்பு ஆடு ஒருத்தவங்க இருக்காங்க அவங்க தான் தீவிரவாதிகளுக்கு எல்லா விதமான தகவல்களையும் கொடுத்துட்டாங்க என சொல்ல சேட்டன் முகம் மாறுகிறது. இதனால் அவர் தான் அந்த கருப்பு ஆடு என எல்லோரும் நினைக்க கடைசியில் சந்தியா ஜோதி தான் அந்த கருப்பு ஆடு என்ன சொல்ல ஜோதி அங்கிருந்து தப்பித்து விட முயற்சி செய்ய போலீஸ் அவரை சுற்றி வளைக்கிறது.
இருந்தபோதிலும் மேலதிகாரிகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது எப்படி குற்றம் சொல்ல முடியும் என கேட்க அதற்கான தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக சொல்லி அந்த காட்டுக்குள் ஒரு ரகசிய அறையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள ஜோதி வாக்கி டாக்கி மறைத்து வைத்திருக்கும் விஷயத்தை சந்தியா கண்டுபிடித்தது தெரிய வருகிறது. பிறகு போலீஸ் அதிகாரிகளை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அதை நிரூபிக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இன்னொரு ஆதாரம் இருக்கு என்ன சொல்லி தன் உடம்பில் இருந்து எடுத்த குண்டை எடுத்துக்காட்டி இது எல்லோரிடமும் இருக்கும் குண்டு இது எப்படி எனக்குள் வந்தது என சந்தேகம் இருந்தது. பிறகு சாரிடம் சொல்லி எல்லோருடைய துப்பாக்கிலும் குண்டை பரிசோதனை செய்ய சொன்ன போது ஜோதியின் துப்பாக்கி தான் ஒரு குண்டு குறைந்து இருக்கிறது. அதனால் அவர் தான் அந்த கருப்பு ஆடு என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…