Raja Rani 2 Serial Episode Update 15.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க அப்போது அந்த ஆதி எண்ணை கடையில ஒரே கூட்டமா இருக்கு என்று சொல்ல அனைவரும் கடையில் கூட்டம் குவிந்து இருப்பதைப் பற்றிப் பேசுகின்றனர். இந்த நேரத்தில் சந்தியாவும் அங்கு வர குருமா வைக்கிறனு சொன்னியே வெச்சிருக்கியா என சிவகாமி கேட்க பண்ணிட்டேன் என கூறுகிறார். இதையெல்லாம் போட்டு கேட்ட அர்ச்சனா தனியா சமைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டயா? இது தப்பாச்சே என கூறுகிறார்.
பிறகு சரவணன் அங்கு வந்துவிட கடையில் நல்ல கூட்டம் சமாளிக்க முடியல என சொல்லி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் 25 ஆயிரம் ரூபாய் வருமானம் என சிவகாமியுடன் கொடுக்கிறார்.. இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த சிவகாமி பணத்தை வாங்கிக்கொண்டு சரவணனுக்கு சுற்றி போடுகிறார்.
இந்த பக்கம் கிச்சனுக்கு போன அர்ச்சனா சப்பாத்தியும் குருமாவும் சாப்பிட்டு பார்த்து விட்டு அற்புதமாக இருக்கே இது எனக்கு நல்லது இல்லையே என சொல்லி குருமாவும் உப்பைக் கொட்டி கலக்கி விடுகிறார். இன்னொரு பக்கம் சிவகாமி கணவரோடு அமர்ந்து பணம் காணாமல் போனது பற்றி பேசுகிறார். பணத்தை எடுத்தவங்க சும்மா இருக்க மாட்டாங்க கண்டிப்பா ஏதாவது பெருசா செலவு பண்ணுவாங்க அதை வைத்து கண்டுபிடித்து விடலாம் என ஐடியா கொடுக்கிறார்.
ஆனா இத விஷயத்துல கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும் என கூறுகிறார். சிவகாமி பணத்தை திருடியது திருடனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை சும்மா விடக்கூடாது என கூறுகிறார்.
ரூமுக்குள் சரவணன் சந்தியாவும் கடையில் நல்ல கூட்டம் போல என சொல்ல சரவணன் ஆமாம் செல்வம் வேற ஊருக்கு போய்ட்டான் சமாளிக்க முடியல என சொல்கிறார். என்ன கூப்பிடுங்க நான் வந்து உதவி செய்து இருப்பேன் என சந்தியா செல்ல இங்க வந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க என சொல்ல கத்துக்க வேண்டியது தான் என சந்தியா கூறுகிறார். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என சரவணன் சொல்கிறார். பிறகு உங்களுக்காக ஒரு ஸ்வீட் செய்தேன் என சொல்லி சரவணன் அதை எடுத்து வந்து சந்தியாவிற்கு ஊட்டி விடுகிறார்.
ஸ்வீட் சாப்பிட்டு சூப்பராக இருக்கு என சொன்ன சந்தியா பதிலுக்கு சரவணனுக்கு ஊட்டி விடுகிறார். இப்படி இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டு ரொமான்ஸ் செய்கின்றனர். பிறகு சரவணன் ஐ லவ் யூ சொல்ல சொன்னதை கேட்டு சந்தியா அதெல்லாம் சொல்ல முடியாது எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கணும் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…