Raja Rani 2 Serial Episode Update 06.05.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விக்கியை சரவணனும் செந்திலும் அடிக்க பாய அவர்களை சந்தியா தடுத்து நிறுத்துகிறார். அவளை கூட்டிட்டு போக அவங்க மாமியார் வீட்டில் இருந்து வர சொல்லி இருக்கேன் என சொல்லி போலீசை இல்லை அழைக்கிறார். பிறகு பார்வதி நீ ஏதாவது சொல்லனும்னா சொல்லு உனக்கு துணையா நாங்க இருக்கோம் என விக்கியிடம் அனுப்பி வைக்கின்றனர்.
என்ன எப்படி எல்லாம் மிரட்டின குடும்பத்தோடு செத்துப் போக சொன்ன.. நாங்க ஏன் சாகணும் நாங்க ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழ்ந்து காட்டுவோம். நாங்க சந்தோஷமாக வாழ்வதை பார்த்து நீ குடும்பத்தோட செத்துப் போ என பார்வதி சொல்கிறார். இதைக் கேட்ட எல்லோரும் கைத்தட்டி பார்வதியை கூற்றாக படுத்துகின்றனர். பிறகு சரவணன் இந்த ராஸ்கல் கண் முன்னே தான் என் தங்கச்சி கல்யாணம் நடக்கணும். அதுக்கு நீங்கதான் அனுமதி கொடுக்கலாம் என சொல்ல போலீஸ் அதிகாரி தாலி கட்ட சொல்லுங்க என கூறுகிறார். பிறகு பார்வதி பாஸ்கர் திருமணம் நடக்கிறது. பாஸ்கர் பார்வதிக்கு ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்து தாலி கட்டுகிறார். பிறகு இருவரும் சேர்ந்து விக்கியை வெறுப்பேற்றுகின்றனர்.
அதன் பின்னர் போலீஸ் விக்கியை கைது செய்து அழைத்துச் செல்கிறது. பிறகு சிவகாமி நன்றி சொல்ல இது எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான் என பாஸ்கரின் அம்மா சொல்கிறார். அதன்பிறகு பார்வதியின் கட்டியணைத்து விடைபெறுகிறார். பிறகு பாஸ்கரும் பார்வதியின் கூட கல்யாணம் நடக்க நீங்கதான் காரணம் என்று சரவணன் சந்தியாவின் காலில் விழுகின்றனர்.
இந்த சூழ்நிலையை கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா உங்க அம்மா தான் கல்யாணம் நடக்க காரணம். உங்க குடும்பத்துக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கும் என சரவணன் சொல்கிறார். பிறகு இந்த மாதிரி மருமக கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும் என சந்தியாவை பாராட்டுகிறார் பாஸ்கரின் அம்மா. அர்ச்சனா ரெடியாகி உன்னிடம் மட்டும் போதாது இந்த மாதிரி இருக்க கத்துக்க என பெருமையாக பேசி அர்ச்சனாவை வெறுப்பு ஏற்றுகிறார்.
பிறகு அர்ச்சனாவின் அப்பா அம்மா தங்கச்சி மூவரும் அர்ச்சனாவை திட்டி தீர்த்து விட்டு வீட்டிற்கு கிளம்புகின்றனர். நீ எல்லாம் ஒரு அக்காவா உனக்கு தங்கச்சியா பிறந்ததுக்கு அந்த சந்தியாவுக்கு தங்கச்சிய பிறந்திருக்கலாம் என திட்டி விட்டு செல்கிறார்.
பிறகு சந்தியாவும் சரவணன் சந்தியாவின் அண்ணன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க அப்போது சிவகாமி அடுத்த வருஷம் அன்றியவும் இப்படி ஒரு குழந்தையை மடியில் வைத்து இருக்க வேண்டும் என சொல்லிட்டு போ என கூறுகிறார். அதன்பிறகு சரவணன் நீங்கள் பெருசா எடுத்துக்காதீங்க என சொல்ல சீக்கிரம் அவங்ககிட்ட சந்தியா படிக்கிற விஷயத்தை சொல்லிடுங்க. உண்மையை தள்ளிப்போட வேண்டாம் என கூறுகின்றனர். சரவணன் சீக்கிரம் சொல்லி விடுவதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…