ponniyin selvan shooting canceled
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் நடத்தினர். பின்னர் கொரோனா பரவலால் படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர். அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவி நடிகர், நடிகைகள் நோய் தொற்றில் சிக்குவதாலும் மும்பையில் நடந்த அக்ஷய்குமாரின் இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறுவதாக இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழுவினர் ரத்து செய்து விட்டனர். இதுவரை பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…