ரூ.250 கோடிக்கு கேட்ட ஓடிடி தளம்… மறுத்த ‘கேஜிஎஃப் 2’ படக்குழு

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். நாயகன் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ‘கேஜிஎஃப் 2’ புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குனர் பிரஷாந்த் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னணி ஓடிடி தளம் ‘கேஜிஎஃப் 2’ படத்தை ரூபாய் 250 கோடிக்கு நேரடியாக வெளியிட கேட்டுள்ளது. இதற்கு, நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. தியேட்டரில் மட்டுமே ’கேஜிஎஃப் 2’ படத்தை ரசிகர்கள் ரசிக்கவேண்டும்” என்று ஓடிடி தளத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Suresh

Recent Posts

சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

5 hours ago

தயாரிப்பாளராக என்ட்ரி கொடுக்கும் சிம்ரன்.. புதிய படத்தின் தகவல் இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…

13 hours ago

அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவான வைஷாலி தணிகா..குவியும் வாழ்த்து..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…

13 hours ago

தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் மதராசி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

13 hours ago

அஜய் அப்பாவிடம் கெஞ்சிய முத்துமீனா, கிருஷ் எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…

14 hours ago

நந்தினியை பார்க்க வந்த சிங்காரம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago