ஜெயிலர் 2 படத்தில் பெரிய சர்பிரைஸ் வைத்திருக்கும் நெல்சன்
நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த மகன் அர்ஜுனை காவல்துறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் சுட்டுக் கொன்றுவிடுவதாக படம் முடிந்து விடுவது தெரிந்ததே.
இந்நிலையில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் அர்ஜுன் கேரக்டரில் மீண்டும் பார்க்கலாமா என வசந்த் ரவியிடம் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இதனால், யார் கேட்டாலும் முதலில் பதில் சொல்லாமல் இருந்த வசந்த் ரவி, தற்போது ‘சர்ப்பிரைஸ்’ என்று மட்டும் சொல்கிறார்.
‘சர்ப்பிரைஸ்’ எனும் இந்த ஒரு வார்த்தையை வைத்து ரசிகர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
‘ஜெயிலர்-2’ படத்தில் நான் நடிக்கவில்லை என்று வசந்த் ரவி சொல்லவில்லை. அப்படியென்றால் அவரை ஜெயிலர்- 2 படத்தில் பார்க்கலாம் என கணித்து வருகின்றனர் ரசிகர்கள். முதல் பாகத்தில் இறந்ததாக காட்டப்படும் ஒரு கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் வந்தால் அது நிச்சயம் சர்ப்பிரைஸ் தான்.
மேலும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் ஷாருக்கான், மிதுன் சக்கரவர்த்தி, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
அதிலும் ரஜினியுடன் வரும் சிவராஜ்குமாரின் கதாபாத்திரம் முதல் பாகத்தை போன்று இல்லாமல் இரண்டாம் பாகத்தில் கூடுதல் காட்சிகளில் வருவதாக கூறப்படுகிறது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…