அர்ச்சனா செய்த வேலை, சூர்யாவுக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கிச்சனில் சமைக்க ரேணுகா டிசைனர் சாரீ எல்லாம் கட்டலால என்று கேட்க ஏன் இந்த புடவைக்கு என்ன குறை என்று கேட்க இவ்வளவு பெரிய வீட்டோட மருமகளா இருக்கீங்க அதனால தான் கேட்டேன் என்று சொல்ல உன் வேலையை பாரு என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா மல்லிப்பூ அல்வா உடன் வந்து பாட்டு பாடிக்கொண்டு வந்து நந்தினி கூப்பிடுகிறார். அசோகன் கையில் என்ன பூ என்று கேட்க மல்லு பூ அல்வா என்று சொல்லுகிறார். இது ஒரு டைப்பான காம்பினேஷன் ஆச்சே இதுக்கு எதுக்கு மாப்ள உனக்கு என்று கேட்க அதுக்கான அர்த்தம் தெரிஞ்சிருந்தா தான் என்னால நிறைய குழந்தை இருந்திருக்குமே என்று சொல்லி வாயை அடைக்கிறார். உடனே நந்தினி கூப்பிட்டு ஏதோ மதுர மல்லி திருநெல்வேலி அல்வா உனக்காக தான் தேடி வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல இதெல்லாம் எதுக்கு சார் வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க நீ என்னோட லவ்லி ஒய்ஃப் அதனால தான் என்று சொல்லுகிறார்.

இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் டாடி என்று சொல்லி, நந்தினியிடம் திரும்பி நில்லு நான் பூ வைக்கிறேன் என்று சொல்ல நந்தினி வேண்டாம் என சொல்லுகிறார். ஆனால் சூர்யா நான் தான் வெற்றி விடுவேன் உனக்கு மட்டும்தான் ஒரிஜினல் முடி மீதி பேருக்கெல்லாம் விக் என்று சொல்லி கிண்டல் அடிக்க சூர்யா நந்தினி பேச்சை கேட்காமல் நான்தான் வைப்பேன் என அடாவடி எடுக்க சுந்தரவல்லி கோபப்பட்டு சென்று விடுகிறார் நந்தினியும் மேலே சென்றுவிட அசோகன் அந்த பூவையும் அல்வாவையும் என்கிட்ட கொடுத்திடு மாப்பிள்ளை என்று சொல்ல சூர்யா நந்தினிக்காக மேலே எடுத்துக் கொண்டு வருகிறார்.

தயவு செஞ்சு இதோட நிறுத்திக்கோங்க, இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க இவ்வளவு நாள் இல்லாம இப்ப என்ன புதுசா என்று கோபப்படுகிறார். உடனே சூர்யா இதை நான் வாங்கல விவேக் வாங்கி வெச்சிருந்தா அதை கொடுக்க தான் வந்த ஆனா தாய் குலத்த பார்த்த உடனே இப்படி பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டு நந்தினிவிடம் பூவையும் அல்வாவையும் கொடுக்க அவர் கருப்பசாமி படத்திற்கு பூ போடா ஏற்பாடு செய்து கொண்டிருக்க கருப்பசாமி பக்கத்தில் உட்கார்ந்து குடிக்க போட்டோ பக்கத்துல உக்காந்து கொடுத்திருந்த அவங்க மண்டையில ஏதாவது இருக்கா என்று கேட்கிறார். என்ன நந்தினி புதுசா ஆர்டர் போடுற என்று கேட்க நந்தினி பூவைத்து விளக்கேற்றி சாமி கும்பிடுகிறார்.

சூர்யா அல்வாவை எடுக்கப் போக இப்போ இது பிரசாதம் எடுக்க கூடாது என்று சொல்லுகிறார். உடனே சூர்யா கருப்பசாமியிடம் புலம்ப, கருப்பசாமி என் பக்கம் தான் என நந்தினி சொல்லுகிறார். எனக்கு எப்பவுமே இவன்தான் பிரண்டு என்று சரக்கு பாட்டிலை சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கல்யாணம் ரேணுகாவை இதுதான் வேலைக்கு வர நேரமா என்று சொல்ல நந்தினி அக்கா வரலையா என்று கேட்க அவங்க இந்த வீட்டோட முதலாளி நம்ம தான் வேலை செய்றவங்க நீங்க வேலைய பாரு என்று சொல்ல அந்த நேரம் பார்த்து நந்தினி பரபரப்பாக கிச்சனுக்கு வந்து வேலையை ஆரம்பிக்கிறார். நீங்க புதினாவை மட்டும் கில்லி கொடுங்க மீதிய நான் பாத்துக்குறேன் என்று நந்தினி சொல்லுகிறார்.

நந்தினியிடம் கல்யாணம் நேத்து சூர்யா தம்பி அல்வாவையும் மல்லி பூவையும் வாங்கிட்டு வந்து கலக்கிட்டாரு போல என்று சொல்ல நீங்க வேற அவர் ஏதாவது பண்ணி விடுறாரு எல்லாம் என் தலையில தான் பிரச்சனையா வருது என்று சொல்லுகிறார். நான் ஒரு வேலையா விஜி அக்கா வீட்டுக்கு போயிட்டு வரேன் என சொல்ல சரி போயிட்டு வாம்மா நான் பாத்துக்குறேன் என்று கல்யாணம் சொல்லியும் நான் எல்லாத்தையும் செஞ்சுட்டே போறேன்னு சொல்லி சமையலை ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறார்.

ரேணுகாவிடம் பாத்திரம் கழுவிட்டு மேல துணி இருக்கு அதை எடுத்து விடு என்று சொல்லி விட்டு, இதுக்கு மேல கடைசியா கொத்தமல்லி தூவி மட்டும் இறக்கிடுங்க என்று சொல்லிவிட்டு நந்தினி சென்ற விடுகிறார். உடனே வெளியில் வந்த ரேணுகா அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு விஜி வீட்டுக்கு நந்தினி போகும் விஷயத்தை சொல்ல சரி நான் பார்த்துக்கிறேன் ஃபோனை வை என்று சொல்லுகிறார். நந்தினி ஆட்டோவில் போக அர்ச்சனா காரில் பின் தொடருகிறார். கொஞ்ச நேரத்தில் ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்க அவர் சரி பண்றேன் என்று சொல்ல இருக்கட்டும் அண்ணா பக்கத்துல தான் வீடு நான் நடந்தே போகிறேன் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து செல்ல அர்ச்சனா நந்தினி பக்கத்தில் காரை நிறுத்தி எங்க போய்கிட்டு இருக்க என்று கேட்கிறார். தெரிஞ்ச அக்கா வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, இந்த ஊர்ல உனக்கு நிறைய பேரு தெரியும் போல என்று சொல்ல எனக்கு தெரிஞ்சது விஜி அக்கா மட்டும்தான் அவங்க வீட்டுக்கு போறேன் என்று சொல்ல உடனே அர்ச்சனா எந்த விஜி என்று கேட்கிறார்.

ஒன்று வெளியான ப்ரோமோவில் இட்லி இடியாப்பம் சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூஸில் சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறார். உணவுத்துறை அதிகாரிகள் அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி ரிமாண்ட் பண்ணிடுவேன் என்று சுந்தரவல்லி வீட்டுக்கு வந்து வார்னிங் கொடுக்கிறார்.

உடனே சூர்யா வேற யாராவது வந்தாங்களா என்று கேட்க ஒரே ஒருத்தர் வந்தாங்க அந்த அர்ச்சனா என்று சொல்ல, அப்போ கண்டிப்பா அந்த அர்ச்சனாவோட வேலையா தான் இருக்கும் என்று சூர்யா கண்டுபிடிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

 

jothika lakshu

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

12 hours ago

Yolo Official Trailer

Yolo Official Trailer | Dev, Devika, Akash, VJ Nikki, Badava Gopi | S Sam|Sagishna Xavier…

17 hours ago

Idhu Devadhai Nerame Lyrical Video

Idhu Devadhai Nerame Lyrical Video | Kumaara Sambavam | Kumaran, Payal | Achu Rajamani

17 hours ago

Gandhi Kannadi Official Trailer

Gandhi Kannadi Official Trailer | Bala, Namita, Balaji Sakthivel, Archana | Vivek-Mervin | Sherief

17 hours ago

Oorum Blood Video Song

Oorum Blood Video Song | Dude | Pradeep Ranganathan, Mamitha Baiju | ‪SaiAbhyankkar‬ | Paal…

17 hours ago

Mirai Tamil Trailer

Mirai Tamil Trailer | Teja Sajja | Manchu Manoj | Karthik Gattamneni | AGS |…

17 hours ago