சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா இருவரும் சுந்தரவல்லியை பாராட்டி பேசுகின்றனர். இது என்ன இருக்கு இதுக்கு மேல நான் ஆட போற ஆட்டத்தை அவங்களால தாங்க முடியாது என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி வந்து டென்ஷனாகாம வந்து படுங்க என்று சொல்ல, அப்படியெல்லாம் விட முடியாது என்று சூர்யா சொல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று நந்தினி சொல்லியும் சூர்யா நீ போய் படு நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். மறுநாள் காலையில் அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க சுந்தரவல்லி இன்விடேஷன் கொடுக்கப் போகலாமா என்று கேட்க என்னோட பிறந்த நாள் எப்படி வர முடியும் நீயே போ என்று சொல்லி அனுப்ப சுரேகாவை பூஜை ரூமில் இருந்து பத்திரிக்கைகளை கவரில் போட்டு எடுத்துட்டுவா என்று அனுப்புகிறார்.

உடனே சுந்தரவல்லி பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, சூர்யா கீழே இறங்கி வந்து அசோகன் மாதவி இடம் வம்பு இழுக்கிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட்டு பூஜை ரூமில் இருந்து பத்திரிக்கையை எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். வந்தவுடன் நந்தினியையும் கூப்பிட்டு பார்சலை பிரிக்க சொல்லி முதல் பத்திரிக்கை கல்யாணத்துக்கு தான் என சொல்லி இருவரும் பத்திரிக்கை கொடுக்க கல்யாணம் கண் கலங்குகிறார். அதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் நீ முதல்ல பத்திரிக்கையை சத்தமா படி என்று சொல்ல அதில் நந்தினி பெயர் மருமகள் என இருப்பதை பார்த்து மாதவி சுரேகா அசோகன் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சூர்யாவும் விக்ரமும் காரில் வர இன்விடேஷன் எடுத்துப்பாரு என்று சொல்லுகிறார். ஆன்ட்டி அடிச்ச பத்திரிக்கையில நந்தினி பேரா என்று ஆச்சரியப்பட்டு கேட்க கீச்சாங்க என்று கோபப்படுகிறார். பிறகு சூர்யா நடந்த விஷயத்தை பெயர் மாற்றிய விஷயத்தையும் விவேக்கிடம் சொல்லுகிறார்.

அப்போதுதான் சூர்யா தான் பிரிண்ட் அடிப்பவர்களிடம் நந்தினியின் பெயரை அடிக்கச் சொல்லி பத்திரிக்கையை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. உடனே சூர்யாவிடம் விவேக் நீ நல்ல வேலை தான் பண்ண ஆனா இது தங்கச்சி இவ்ளோ பாதிக்கும்னு நீ நெனச்சு பார்த்தியா என்று சொல்ல சூர்யா விவேக்கிடம் பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திடம் சுந்தரவல்லி அம்மாகிட்ட என்ன நடந்ததுன்னு விலாவரியா சொல்லிருப்பாங்க அவங்க ஆக்ரோஷமா கிளம்பி இங்கதான் வந்துட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லிக்கு அவரது தோழி போன் போட்ட உன்னோட மருமக பேரு நந்தினி என்று நல்ல போட்டு இருக்கியே என்று கேட்க சுந்தரவல்லி கடுப்பாகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் டாடியோட பர்த்டேக்கு அவர் பக்கத்துல தான் இருக்கணும் அவரை நீ மனசார வாழ்த்தணும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 30-12-25
jothika lakshu

Recent Posts

“நான் சூனியக்காரியா..?” – முன்னாள் காதலரை நினைத்து வேதனை பகிர்ந்த கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…

15 hours ago

விஜய்யின் ‘பஞ்ச்’ வசனம்… சத்யராஜ் சர்ச்சைக்கு சிபிராஜின் பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…

15 hours ago

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…

15 hours ago

வா… வா… என் தேவதையே… குட் நியூஸ் சொன்ன அட்லீ!

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…

15 hours ago

பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியக் கொடி… சவாலான பந்தயத்தில் அசத்திய அஜித் குமார்!

திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…

15 hours ago

Kara Official Trailer

Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…

1 day ago