சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா இருவரும் சுந்தரவல்லியை பாராட்டி பேசுகின்றனர். இது என்ன இருக்கு இதுக்கு மேல நான் ஆட போற ஆட்டத்தை அவங்களால தாங்க முடியாது என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி வந்து டென்ஷனாகாம வந்து படுங்க என்று சொல்ல, அப்படியெல்லாம் விட முடியாது என்று சூர்யா சொல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று நந்தினி சொல்லியும் சூர்யா நீ போய் படு நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். மறுநாள் காலையில் அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க சுந்தரவல்லி இன்விடேஷன் கொடுக்கப் போகலாமா என்று கேட்க என்னோட பிறந்த நாள் எப்படி வர முடியும் நீயே போ என்று சொல்லி அனுப்ப சுரேகாவை பூஜை ரூமில் இருந்து பத்திரிக்கைகளை கவரில் போட்டு எடுத்துட்டுவா என்று அனுப்புகிறார்.

உடனே சுந்தரவல்லி பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, சூர்யா கீழே இறங்கி வந்து அசோகன் மாதவி இடம் வம்பு இழுக்கிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட்டு பூஜை ரூமில் இருந்து பத்திரிக்கையை எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். வந்தவுடன் நந்தினியையும் கூப்பிட்டு பார்சலை பிரிக்க சொல்லி முதல் பத்திரிக்கை கல்யாணத்துக்கு தான் என சொல்லி இருவரும் பத்திரிக்கை கொடுக்க கல்யாணம் கண் கலங்குகிறார். அதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் நீ முதல்ல பத்திரிக்கையை சத்தமா படி என்று சொல்ல அதில் நந்தினி பெயர் மருமகள் என இருப்பதை பார்த்து மாதவி சுரேகா அசோகன் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சூர்யாவும் விக்ரமும் காரில் வர இன்விடேஷன் எடுத்துப்பாரு என்று சொல்லுகிறார். ஆன்ட்டி அடிச்ச பத்திரிக்கையில நந்தினி பேரா என்று ஆச்சரியப்பட்டு கேட்க கீச்சாங்க என்று கோபப்படுகிறார். பிறகு சூர்யா நடந்த விஷயத்தை பெயர் மாற்றிய விஷயத்தையும் விவேக்கிடம் சொல்லுகிறார்.

அப்போதுதான் சூர்யா தான் பிரிண்ட் அடிப்பவர்களிடம் நந்தினியின் பெயரை அடிக்கச் சொல்லி பத்திரிக்கையை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. உடனே சூர்யாவிடம் விவேக் நீ நல்ல வேலை தான் பண்ண ஆனா இது தங்கச்சி இவ்ளோ பாதிக்கும்னு நீ நெனச்சு பார்த்தியா என்று சொல்ல சூர்யா விவேக்கிடம் பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திடம் சுந்தரவல்லி அம்மாகிட்ட என்ன நடந்ததுன்னு விலாவரியா சொல்லிருப்பாங்க அவங்க ஆக்ரோஷமா கிளம்பி இங்கதான் வந்துட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லிக்கு அவரது தோழி போன் போட்ட உன்னோட மருமக பேரு நந்தினி என்று நல்ல போட்டு இருக்கியே என்று கேட்க சுந்தரவல்லி கடுப்பாகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் டாடியோட பர்த்டேக்கு அவர் பக்கத்துல தான் இருக்கணும் அவரை நீ மனசார வாழ்த்தணும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 30-12-25
jothika lakshu

Recent Posts

பிரான்சில் குடும்பத்துடன் மகிழும் அஜித் – ஷாலினி; வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…

7 minutes ago

“சினிமாவில் போட்டி என்பது ஒரு மாயை” – மனம் திறந்த நடிகை சமந்தா!

திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…

12 minutes ago

‘சீயான் 63’ திரைப்படத்தில் இணைந்தார் சம்யுக்தா ஹெக்டே!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…

17 minutes ago

அஜித்திற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் விஜய்!

சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…

22 minutes ago

இரட்டைக் குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண் – உபாசனா தம்பதி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…

28 minutes ago

Love Oh Love Official Teaser

Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…

1 hour ago