mayil-swami-son-speech viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. காமெடி குணச்சித்திர வேடம் என பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
மற்றவர்களுக்கு உதவுவதில் வள்ளலாக இருந்த மயில்சாமியின் மறைவு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மயில்சாமி கடைசியாக நடித்துள்ள கிளாஸ்மேட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மயில்சாமியின் மகன்கள் கலந்து கொண்டு பேசினர். அப்பா இந்த படத்துக்காக 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு கொடுத்துவிட்டு நான்காயிரம் ரூபாயை அசிஸ்டன்களுக்கு கொடுத்தார். ஆயிரம் ரூபாய் எங்களுக்கு கொடுத்துவிட்டார். மீதி அப்பாவின் கையில் இருந்தது வெறும் 30 ரூபாய் தான் என அசிஸ்டன்ட் சொன்னதாக மயில்சாமி மகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகாது அவர் செய்த உதவிகளை தொடர்ந்து நாங்கள் செய்வோம் என மயில்சாமியின் மகன்கள் பேசியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…