ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்.விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு.

தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான இவர் தனது முன்னாள் கணவரான தனுஷின் 3 படத்தின் மூலம் அனைவருக்கும் இயக்குனராக பரிச்சயமானார். அதன் பிறகு ஒரு சில படங்களை இயக்கிய இவர் தனுஷை விவாகரத்து செய்த பிறகு லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் தொடங்கியை இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக திருவண்ணாமலையில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தில் படப்பிடிப்பை காண திரண்டு வந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் படம் பிடித்துள்ளனர். இதனை அறிந்த தனியார் பாதுகாவலர்கள்பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். மேலும் பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.


lal-salam-film-crew-for-causing-disturbance-to-the-public
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

9 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

10 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

10 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

10 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago