Karthi's 'Vaa Vaathiyaar' to release on Jan. 14: Film crew announces
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடக்கியுள்ளது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
‘சினிமா என்பது திரையில் காட்டப்படும் கதைகளை விட மேலானது; அது இதயத் துடிப்பை பகிர்வது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், பார்வையாளர்களும், கலைஞர்களும், திரையுலகப் படைப்பாளிகளும் ஒன்றிணையும் ஒரு திருவிழா அது. அப்போது குடும்பங்கள் ஒன்று கூடி பெரிய திரையின் மாயாஜாலத்தைக் கொண்டாடுகின்றன.
எங்கள் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை.
தற்போது, ’வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14 அன்று, பொங்கல் பண்டிகை வெளியீடாக உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்த நேரம் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை சரியாக பிரதிபலிக்கிறது.
‘வா வாத்தியார்’ படத்துடன் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும், வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு கதையும் அதன் பார்வையாளர்களைக் கண்டடையட்டும், மேலும் நமது திரையுலகம் தொடர்ந்து வலிமையுடன் வளரட்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முன்னதாக, ‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, வெளியீட்டுச் சிக்கல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…
அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…
நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…