“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலையைத் தேடி நான் செல்​வ​தில்​லை.

வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்’ என்​றார்.

இந்​தப் பேட்டி சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இவரது கருத்துக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் எதி​ரான கருத்​துக்​களை தெரி​வித்​தனர்.

இதற்கு சமூக ஊடகத்​தில் வெளியிட்ட வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது: ‘இசை எப்​போதும் இந்​திய பண்பாட்​டுடன் இணைவதற்​கும், அதை கொண்​டாடு​வதற்​கும், மதிப்​ப​தற்​கு​மான ஒரு வழி​யாகவே எனக்கு இருந்து வரு​கிறது. இந்தி​யா ​தான் எனது ஊக்​கம், என் ஆசான், என் வீடு. சில நேரங்களில் நோக்​கங்​கள் தவறாகப் புரிந்​து​கொள்​ளப்​படுகின்றன. ஆனால், இசை​யின் மூலம் முன்​னேறு​வது, மரியாதை செலுத்​து​வதும் சேவை செய்வதுமே எப்​போதும் என் நோக்​க​மாக இருந்து வந்​துள்​ளது.

யாரை​யும் புண்​படுத்த வேண்​டும் என நான் ஒரு​போதும் நினைத்ததில்​லை. என் நேர்​மையை மக்​கள் புரிந்துகொள்​வார்​கள் என்று நம்​பு​கிறேன்.

நான் இந்​தி​ய​னாக இருப்​ப​தில் பெரு​மிதம் கொள்​கிறேன். இதுதான் கருத்து சுதந்திரத்தை அனு​மதிக்​கிறது. பல்​வேறு பண்​பாடு​களின் குரல்களை கொண்​டாட வைக்​கிறது. ஜெய் ஹிந்த், ஜெய் ஹோ என ஏ.ஆர்.ரகுமான்​ கூறியுள்ளார்.

தற்போது பாலிவுட்டில் ரன்வீர்சிங், சாய்பல்லவி ராமர்-சீதையா நடிக்கும் புராண காவியம் ‘இராமாயணா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“I never wanted to offend anyone” – A.R. Rahman responds to criticism
dinesh kumar

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

16 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

16 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

16 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

16 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

16 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

16 hours ago