நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்.. நடிகர் விஜய்பாபு பரபரப்பு தகவல்

மலையாள நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு, மீது கேரள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக கொச்சி போலீசில் அவர் அளித்த புகாரில், நடிகர் விஜய்பாபு, தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருந்ததாக கூறியிருந்தார். நடிகையின் புகார் தொடர்பாக கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த நடிகர் விஜய்பாபு, நடிகையின் பெயர் விபரங்களுடன் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார். இது சட்டவிரோதம் எனக்கூறிய போலீசார், இதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த 2 வழக்குகள் தொடர்பாக போலீசார் விஜய்பாபுவை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதை அறிந்த போலீசார் அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். இதற்கிடையே நடிகர் விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, அவரை விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டது. மேலும் 2-ஆம் தேதி வரை அவரை கைது செய்யவும் தடை விதித்தது.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து விஜய்பாபு நேற்று வெளிநாட்டில் இருந்து கொச்சி வந்தார். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் நடிகை குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அதன்விபரம் வருமாறு:-

என் மீது புகார் கூறிய நடிகையை எனக்கு முன்பே தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரது சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம். எனது படங்களில் நடிக்க நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் என்மீது புகார் கூறியுள்ளார். இது வேண்டுமென்றே கூறப்பட்ட புகார். எனது தொழில் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான விசாரணைக்கு நான் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என போலீசாரிடம் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

போலீஸ் விசாரணையின் போது நடிகையுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்ட தகவல்களையும் ஒப்படைத்துள்ளார்.

அந்த தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே இன்றும் நடிகர் விஜய்பாபுவை விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி நடிகர் விஜய்பாபு கொச்சி போலீசார் முன்பு இன்றும் ஆஜரானார். அப்போது நடிகையின் விபரங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடக்க உள்ளது. இது தவிர அவர் தலைமறைவாக இருக்க உதவியது யார்? எங்கு தலைமறைாவாக இருந்தார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Suresh

Recent Posts

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அதிரடிப் படத்தில் யார் ஹீரோ?

பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…

1 day ago

திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…

1 day ago

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என தலைப்பு அறிவிப்பு!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…

1 day ago

ஹபீபி- திரை விமர்சனம்

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…

1 day ago

ஆட்டி – திரை விமர்சனம்

மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…

1 day ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

1 day ago