கணேசாபுரம் திரைவிமர்சனம்

கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் திருடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் போல் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை தனது கைக்குள் வைத்து இருக்கிறார் ஜமீந்தார் பசுபதி ராஜ்.

ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்க ஆரம்பிப்பதால், நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. நண்பர்களின் சண்டையால் திருட்டு தொழிலுக்கும் செல்லாமல் இருக்கிறார்கள்.

இறுதியில் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா? பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சின்னா, அம்மாசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், காலரை தூக்கிவிடுவது, லுங்கியை தூக்கி கட்டுவது, பீடி பிடிப்பது என்று அடிக்கடி செய்வதால் எரிச்சலடைய வைக்கிறது. டிக் டாக் மூலமாக பிரபலமான ராஜ் பிரியன், சின்னாவின் நண்பராக நடித்திருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நண்பராக வரும் காசிமாயனின் நடிப்பு ஓகே தான். ஆனால், இவருக்கான காதல் காட்சிகள், பாடல் என இரண்டுமே படத்தோடு ஒட்டவில்லை.

கயல் பெரேரா, ராஜ சிம்மன், பசுபதி ராஜ், சரவண சக்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாயகி ரிஷா புதுமுகம் என்பதால் மன்னித்து விடலாம்.

நட்பு, காதல், திருட்டு என கிராமத்து பின்னணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீரங்கன். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது கிராமத்து பின்னணியில் வெளியான பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. யூகிக்கும்படியான காட்சிகள், தந்துவ வசனங்கள், இரண்டாம் பாதியின் நீளம் ஆகியவை படத்திற்கு பலவீனம்.

வாசுவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜா சாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு கைக்கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கணேசாபுரம்’ கவரவில்லை.

Suresh

Recent Posts

“ழகரம்”என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா.!!

புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…

1 hour ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சுரேகா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

இட்லி கடை : தனுஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

4 hours ago

கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. அஜித் சொன்ன தகவல்.!!

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

5 hours ago

வித்யாவிடம் மீனா கேட்ட கேள்வி, மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…

7 hours ago

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள்.!!

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

21 hours ago