famous-director-given-warning-for-the-second-part-of-ps
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை அவர் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஏஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மொத்தம் ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. இரண்டே நாளில் 150 கோடி வசூல் செய்த நிலையில் ஆறு நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் சேர்த்து 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழரின் பெருமையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தை பலரும் புகழ்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் முதல் பாகம் போன்று இருந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் வ.கௌதம் எச்சரித்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது. அதில் அவர் “ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டார். ஆனால் பாண்டியர்களை குற்றம் சாட்டுவதைப் போன்று பொன்னியன் செல்வன் முதல் பாகத்தில் உள்ளது. இதனால் வடதமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் நடவடிக்கை படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டும். வரலாற்றை மாற்றம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…