famous-director-given-warning-for-the-second-part-of-ps
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை அவர் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஏஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மொத்தம் ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. இரண்டே நாளில் 150 கோடி வசூல் செய்த நிலையில் ஆறு நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் சேர்த்து 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழரின் பெருமையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தை பலரும் புகழ்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் முதல் பாகம் போன்று இருந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் வ.கௌதம் எச்சரித்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது. அதில் அவர் “ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டார். ஆனால் பாண்டியர்களை குற்றம் சாட்டுவதைப் போன்று பொன்னியன் செல்வன் முதல் பாகத்தில் உள்ளது. இதனால் வடதமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் நடவடிக்கை படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டும். வரலாற்றை மாற்றம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…
கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…