end-card-to-vidhya-no-1-serial update
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அதே போல் சேனலும் தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு புது சீரியல் களமிறங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆமாம், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை தொடர்ந்து திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது, வெகுவிரைவில் சீரியல் கிளைமேக்ஸை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சீரியல் முடிவடைந்ததும் புது வரவாக ” வீரா ” என்ற பெயரில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாகவும் இதில் ஹீரோவாக ரஜினி சீரியல் புகழ் அருண் நடக்க இருப்பதாகவும் நாயகியாக பேரன்பு சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் பசங்க சிவகுமார், ரஜினி சீரியல் சுபிக்ஷா, வித்யா நம்பர் 1 நிஹாரிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இந்த சீரியலின் கதை என்ன? எப்போதில் இருந்து ஒளிபரப்பாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…