கடந்த சில நாட்களாக போதை பொருள் குற்ற சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை முற்றிலும் தடுக்க கர்நாடக அரசு போராடி வருகிறது.
இந்நிலையில் போதை பொருள் பயன்படுத்துவதாக நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் போலிசார் ராகினி, சஞ்சனா இருவரையும் பெங்களூரு மடிவாளா மகளிர் காப்பகத்தில் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
சிறுநீரின் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க இயலும் என்பதால் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட இருந்தது. ஆனால் நடிகை சஞ்சனா பரிசோதனைக்கு உட்பட மறுத்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை காட்டிய பின் அவர் பரிசோதனை செய்ய ஒத்துக்கொண்டார். அதே வேளையில் ராகினி திவேதி தன் சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின் வேறு மாதிரியும் எடுக்கப்பட்டது.
இதனால் ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என விசாரணை அதிகாரி குறிப்பிட்டதால் போலிஸ் காவல் இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களிலும்…
இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…