director manirathnam talk about kundhavai character in ps1
தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி, சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் படம் பற்றிய கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் கூட்ட கூட்டமாக பார்த்து வருகின்றனர். தற்போது வரை 230 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை தெரிவிக்க விட்டு வரும் இப்படத்தை பலரும் பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் சில விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் எடுத்த பேட்டியில் இயக்குனர் மணிரத்தினம் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் குறித்து வந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “இந்தக் கதையில் குந்தவை புத்திசாலி, அதற்காக அவரைப் பற்றி முழுவதும் சொல்வது கடினம் இது ஒரு திரைகதை படத்தில் ஒரு கதையை கொண்டு வர வேண்டும் என்றால் அந்த கேரக்டர் ஏதாவது செய்ய வேண்டும்” அப்படித்தான் இதில் த்ரிஷாவை பயன்படுத்தியுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…