director mani-ratnam-talk-about-rajamouli
மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது அடுத்த பாடலுக்கான தகவலை படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல் நேற்று இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘சோழ சோழ’ பாடலின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் பேசிய மணிரத்தினம் நம் அனைவருக்கும் ஒரு கதவை திறந்து வைத்திருக்கிறார் ராஜமௌலி, இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியும் என்பதை எங்களுக்கு காட்டியுள்ளார்; 2 பகுதிகளாக கதை சொல்லி வெற்றி பெறலாம் என்று நிரூபித்து இருக்கிறார்; பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானது, அவருக்கு நன்றி என்று மணிரத்னம் பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலியை பாராட்டி பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…