dhanush-thai-kelavi-song-issues
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற மூன்று படங்களுமே ரசிகர்களிடையே தனுஷிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து முதல் பாடலான “தாய்க் கிழவி”என்ற பாடல் ஜூன் 24 ஆம் தேதியன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த இந்தப் பாடலின் மீது தற்போது புகார் எழுந்துள்ளது.
அதாவது அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வீடியோ யூ-ட்யூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இருக்கிறது. இந்நிலையில் இப்பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும், சமூக ஆர்வலர் ஒருவர் பாடலின் சில வரிகள் பெரியவர்களை மரியாதை செய்யாத வகையில் உள்ளதாக புகார் அளித்திருக்கிறார். மேலும் இப்பாடலில் இருக்கும் சில வரிகளையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…