துளசி அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு ஆபத்தை உண்டாக்கி விடுகிறது.
பொதுவாகவே துளசி நோய்களை குணப்படுத்தும் மூலிகை என அனைவருக்கும் தெரியும். இது சளி காய்ச்சல் இருமல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக துளசி இருக்கிறது. ஆனால் அது அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும்போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
துளசியை அதிகமாக சாப்பிட்டு வரும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதிகமாக துளசியை மென்று சாப்பிட்டால் பற்கள் சேதம் அடையக் கூடும்.
மேலும் துளசியை அதிகமாக சாப்பிட்டால் ரத்தம் வெளியே அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகமாக துளசி எடுத்துக் கொள்ளக் கூடாது அது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் துளசியை அதிகமாக சாப்பிடக்கூடாது அது ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

