Changes can never be stopped - Suriya
நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். ஞானவேல் இயக்கும் இந்தப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. ஓடிடி தளங்களில் அதிக படங்களை வெளியிடுவது ஏன் என்ற கேள்விக்கு சூர்யா பதில் கூறும்போது, ‘சரவணன் சூர்யாவாக மாறியது தியேட்டர்களில் என்னைப் பார்த்து ரசித்து ரசிகர்கள் கொடுத்த ஆசீர்வாதம் தான்.
கொரோனா நேரத்தில் மொத்தத் தொழிலாளர்களும் முடங்கிப்போய் விட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் போய் விட்டது. ஒரு படம் எடுத்தால் முந்நூறு தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு படங்களை எடுத்திருக்கிறேன். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆறாயிரம் குடும்பங்கள் பலனடைந்திருக்கிறார்கள். தாங்கள் எப்படி வாழ நினைத்தார்களோ அப்படி வாழ்ந்தார்கள்.
ஓடிடி என்பது நிரந்தரமாக இருக்கப்போகும் ஒன்று. மாற்றங்களை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது ஒரு தலைமுறையே மாறுகிறது. அந்த மாற்றத்தைப் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். தியேட்டர்களில் வரக்கூடிய கதைகள் படமாகிக் கொண்டிருக்கிறது. வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் கொண்டாட்டமாக இருக்கும்’ என்றார்.
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…
Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…
94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…
கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…