Changes can never be stopped - Suriya
நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். ஞானவேல் இயக்கும் இந்தப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. ஓடிடி தளங்களில் அதிக படங்களை வெளியிடுவது ஏன் என்ற கேள்விக்கு சூர்யா பதில் கூறும்போது, ‘சரவணன் சூர்யாவாக மாறியது தியேட்டர்களில் என்னைப் பார்த்து ரசித்து ரசிகர்கள் கொடுத்த ஆசீர்வாதம் தான்.
கொரோனா நேரத்தில் மொத்தத் தொழிலாளர்களும் முடங்கிப்போய் விட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் போய் விட்டது. ஒரு படம் எடுத்தால் முந்நூறு தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு படங்களை எடுத்திருக்கிறேன். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆறாயிரம் குடும்பங்கள் பலனடைந்திருக்கிறார்கள். தாங்கள் எப்படி வாழ நினைத்தார்களோ அப்படி வாழ்ந்தார்கள்.
ஓடிடி என்பது நிரந்தரமாக இருக்கப்போகும் ஒன்று. மாற்றங்களை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது ஒரு தலைமுறையே மாறுகிறது. அந்த மாற்றத்தைப் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். தியேட்டர்களில் வரக்கூடிய கதைகள் படமாகிக் கொண்டிருக்கிறது. வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் கொண்டாட்டமாக இருக்கும்’ என்றார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…