bumper-price-super-singer-season-9 update
ஸ்டார் விஜய்யின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 9 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த ரியாலிட்டி ஷோ பலரின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றியமைத்துள்ளது மற்றும் தற்போது உலகளவில் புகழ்பெற்ற பாடகர்களாகவும் விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகிறது.சூப்பர் சிங்கர் சீசன் 9, 20 போட்டியாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. தற்போது கடும் போட்டிகளுக்கு பிறது 10 போட்டியாளர்கள் இந்த போட்டியில் உள்ளனர். கிராண்ட் ஃபைனலை நோக்கி நிகழ்ச்சி முன்னேறும் வேளையில் போட்டியாளர்களுக்கு புதுமையான சுற்றுக்கள் வைக்கப்படுகின்றன.
வரும் வாரத்தில், ஒவ்வொரு போட்டியாளரும் சிறந்த பாடல்களை மிகச்சிறப்பாக பாடவேண்டும். அவ்வாறு அவர்கள் பாடினால் அவர்களுக்கு பைக் பரிசாக காத்திருக்கிறது. இது ஒரு பரபரப்பான சுற்று மற்றும் இந்த வார எபிசோடில் சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ், விஜய் யேசுதாஸ், ஹரிசரண், ஷ்கதிஸ்ரீ கோபாலன், சத்யபிரகாஷ் என ஆறு சிறப்பு நடுவர்கள் குழு இருப்பார்கள். ஃப்ரீஸ்டைல் சுற்றுக்கு போட்டியாளர்கள் பாடும்போது நடுவர்கள் பஸ்ஸரை அழுத்தினாள் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள் என்று அர்த்தம். அவ்வாறு அவர்கள் குறைந்தது ஐந்து முறை வெற்றிபெறவேண்டும்.
ஒரு போட்டியாளர் 6 பஸர்களை வெல்ல முடியும். அதிகபட்சமாக 60 பஸ்ஸரை வெல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் மொத்தமாக 60க்கு ஐம்பது பஸ்ஸரை வென்றால் 10 போட்டியாளர்களுக்கும் தலா ஒரு பைக் கிடைக்கும். சூப்பர் சிங்கர் சீசன் 9 இசை ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் தனித்துவமான நிகழ்ச்சியாகும்.
சீசனின் முடிவில் முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்கள், நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ‘சூப்பர் சிங்கர்’ பட்டத்திற்காக போராடத் தயாராக இருப்பார்கள். வரும் சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் மட்டும் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 9-ஐத் காணத்தவறாதீர்கள்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…