Bharathi Kannamma Serial Episode Update 11.05.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா வீட்டுக்கு வர லட்சுமி பிரபா பற்றி பேசிக்கொண்டிருக்க போதும் நான் இன்னைக்கு நைட்டு அந்த ஆபரேஷன் விஷயமா விழுப்புரம் போகிறேன். நீ ஹேமா வீட்டுக்கு போய் தங்கிக்க. நான் குமார் அண்ணா கிட்ட சொல்லி இருக்கேன் என சொல்ல லட்சுமி இதைக்கேட்டு சந்தோஷப்படுகிறார்.
பிறகு மருத்துவமனையில் பாரதி குழுவுடன் ஆபரேஷன் பற்றி பேசிக்கொண்டிருக்க அப்போது சக்தியின் பெற்றோர் வந்து ஆபரேஷன் நல்லபடியாக நடந்து என் பொண்ணு உயிர் பிழைத்து வந்து விடுவாளா? எதுவும் பிரச்சனை இல்லை தானே என கேட்கிறார். அவர்கள் கண் கலங்கும் பாரதி அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தைரியமாக இருங்க. நீங்க தைரியமாக இருந்தால்தான் சக்திக்கு தைரியம் சொல்ல முடியும். அவளுடைய உடம்பில் இப்போது தைரியம் ரொம்ப முக்கியம் என சொல்ல இந்த நேரத்தில் டாக்டர் அங்கிள் என சக்தி குரல் கொடுக்கிறார்.
பிறகு சக்தி எனக்கு நாளைக்கு ஆபரேஷன் நடக்கப் போகுது. இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நீங்க தான் செய்யப் போறீங்க என்று நான் செய்தியில் பார்த்தேன் என சொல்ல பாரதி நீ தைரியமா இருக்கணும் என கூறுகிறார். நான் பயப்படமாட்டேன் என்னுடைய நல்லதுக்கு தானே இந்த ஆபரேஷன் நடக்கிறது. எனக்காக இவ்வளவு பேர் கஷ்டப்படும் போது நான் மட்டும் எப்படி பயப்படுவேன். தைரியமா இருப்பேன் நீங்க பயப்படாம நல்லபடியா ஆப்பரேஷன் பண்ணுங்க என சொல்கிறார். பாரதி சக்தி தைரியமான பேச்சுக்கு தேங்க்ஸ் சொல்ல அத கண்ணம்மா ஆன்ட்டிக்கு சொல்லுங்க, அவங்க தான் எனக்கு தைரியம் சொன்னாங்க என கூறுகிறார். தைரியமா இருக்கிறேனா என கண்ணம்மாவிடம் சக்தி கேட்க கண்ணம்மா ஆப்பரேஷன் முடிகிற வரைக்கும் இப்படித்தான் இருக்கணும் என சொல்லி குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு கண்ணம்மா குழுவுடன் விழுப்புரத்திற்கு கிளம்புகிறார்.
பிறகு லட்சுமி ஹேமா வீட்டிற்கு வர எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் பாரதி வீட்டிற்கு வர லட்சுமி, ஹேமா என இருவரும் அவருக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். பிறகு இருவரையும் விளையாட அனுப்பி வைத்துவிட்டு சௌந்தர்யா பாரதி உட்கார சொல்லி ஏன் பதற்றமாக இருக்கிற என்று கேட்கிறார். இது ஆப்பரேஷன் சாதாரண விஷயம் கிடையாது இது வரைக்கும் எவ்வளவு ஆபரேஷன் பண்ணி இருந்தாலும் இது ரொம்ப கவனமாக பண்ணவேண்டிய ஆப்பரேஷன். பல பேரோட கூட்டு முயற்சி என கூறுகிறார். எல்லாருடைய முயற்சியையும் வெற்றியடையச் செய்வது என்னுடைய கையில் தான் இருக்கிறது அதனால் பதற்றமாக இருக்கிறது என கூறுகிறார்.
பிறகு சௌந்தர்யா உனக்கு ஒரு கதை சொல்கிறேன் என மகாபாரதத்திலிருந்து அர்ச்சுனன் தூரத்தில் இருக்கும் மலையின் ஓரத்தில் ஒரு மரத்தின் ஒரு கிளையில் இருக்கும் பறவையை கரெக்டாக குறிவைத்து அடித்த விஷயத்தை பற்றி கூறுகிறார். பாரதியின் அப்பாவும் பாரதிக்கு தைரியம் சொல்ல பிறகு பாரதி ஒரு அளவிற்கு ரிலாக்ஸ் ஆகிறார். பிறகு பாரதி தன்னுடைய அம்மா அப்பாவுக்கு நன்றி சொல்லி விட்டு ரூமிற்கு செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar