ஷர்மிளாவால் மகிழ்ச்சியில் சௌந்தர்யா.. வெண்பாவுக்கு வில்லியாகும் அம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வீட்டுக்கு வந்த ஷர்மிளா வரவேற்று உட்கார வைக்கிறார் சௌந்தர்யா. என்ன விஷயம் எதுவாக இருந்தாலும் போனிலேயே பேசி இருக்கலாமே என சொல்ல சில விஷயங்கள் நேரில் பேச வேண்டிய சில விஷயங்களை போனில் பேச வேண்டும். இது நேரில் பேச வேண்டிய விசயம் அதனால்தான் உங்களை பார்க்க வந்தேன் என சொல்கிறார் ஷர்மிளா. என்ன விஷயம் சொல்லுங்க எனக் கேட்க எல்லாம் கல்யாண விஷயமாகத்தான் என சொல்கிறார்.

இதைக் கேட்ட சௌந்தர்யா பாரதியை தான் மாப்பிள்ளை கேட்டு வந்து இருப்பதாக நினைத்துக்கொண்டு எங்க வீட்ல இருக்க 2 பசங்களுக்கும் கல்யாணமாகி பேரன் பேத்தி எடுத்து விட்டேன். உங்களுக்கு யாரோ தப்பான விஷயத்தை சொல்லி தப்பான முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என கூறுகிறார். கல்யாணம் ஆகாத பையன பாருங்க என சொல்கிறார். உடனே ஷர்மிளா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க நீங்க ரொம்ப நாளா சென்னையிலே இருக்கீங்க. பெரிய பெரிய பிசினஸ் செய்து இந்த அதனால உங்களுக்கு நிறைய பேரு தெரிந்திருக்கும். அவங்களும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்பாங்க அப்படி வெண்பாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை யாராவது இருந்தா ரெஃபர் பண்ணுங்க என்ன உதவி கேட்டுத் தான் வந்தேன் என சொல்ல சௌந்தர்யா ரொம்ப நல்ல விஷயம் கண்டிப்பாக நான் உதவி செய்கிறேன் என வாக்கு கொடுத்து அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு சௌந்தர்யா வீட்டில் உள்ளவர்களிடம் இது பற்றி சொல்ல அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அகிலன் ஷர்மிளா நமக்கு வில்லியாக இருப்பாங்கனு நெனச்சா வெண்பாவிற்கு தான் வில்லியா இருக்காங்க என கூறுகிறார். மேலும் இன்னொரு விஷயம் என சொல்லி கண்ணம்மா சக்தியை ஆபரேஷனுக்கு டோனரை சம்மதிக்க வைத்து விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த பக்கம் விக்ரம் கண்ணம்மா பாரதி மற்றும் கணேசன் என்கிற இன்னொரு டாக்டர் ஆகியோர் சக்தியின் ஆபரேஷனை எப்படி செய்து முடிப்பது என பேசிக் கொண்டிருக்கின்றனர். விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இதயத்தை கொண்டு வரும் பணியை கண்ணம்மா செய்யட்டும் என விக்ரம் சொல்ல அதைக்கேட்டு பாரதியும் கணேசனும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாரதி இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இதை கணேசன் செய்யட்டும் என சொல்ல கண்ணம்மாவும் அவரே செய்யட்டும் யார் செய்தால் என்ன இருக்கு சக்திக்கு நல்லபடியா ஆபரேஷன் நடக்கணும் என கூறுகிறார். பிறகு விக்ரமும் ஓகே எனக்கு ஒரு பொறுப்பை கணேசனிடம் ஒப்படைக்கிறார். எவ்வளவு சீக்கிரம் விழுப்புரத்தில் இருந்து இதயத்தை சென்னைக்கு கொண்டு வருவது என்ன செய்வது என கலந்து பேசிவிட்டு தெரியப்படுத்துமாறு கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 09.05.22
jothika lakshu

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

1 day ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

1 day ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

1 day ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

1 day ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

1 day ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

2 days ago