ஹேமாவுக்கு அகிலன் செய்த செயல்.. கடுப்பான பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இத சீரியல் இன்றைய எபிசோட்டில் ஹேமா சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இலங்கையில் போட்டோ பிரேம் உடன் வந்து ஹேமாவுக்கு சப்ரைஸ் கொடுக்கிறார். ஹேமா பிரிண்ட் போட்டு மாற்ற வேண்டும் என சொன்ன போட்டோவை பிரேம் போட்டு எடுத்து வந்திருக்கிறார் அகிலன். இதை பார்த்த என் அம்மா ரொம்ப சூப்பரா இருக்கு என சொல்லிவிட்டு இதை லட்சுமியிடம் சொல்லிட்டு வரேன் என கீழே செல்கிறார்.

இந்த நேரத்தில் பாரதி மேலே வர அகிலன் போட்டோவை மறைத்து விடுகிறார். அது என்னடா எனக்கேட்டு பாதத்தை போட்டோவை எடுத்து பார்த்து ஷாக் ஆகிறார். என்ன கடுப்பேத்தி பாக்குறது இல்ல உங்களுக்கு சந்தோஷமா? அதுக்கு இப்படி பண்றீங்களே. போட்டோ எதுக்கு இங்க மாட்டனும் குழந்தைக்கு வற்புறுத்திக் கேட்டதால் தான் நான் போட்டோ எடுக்க ஒத்துகிட்டேன். இந்த மாதிரி 10 போட்டோ போட மாட்டாங்க ஆனா மனசு மாறும் நினைக்காதீங்க அந்த அளவுக்கு நான் காயப்பட்டு இருக்கிறேன் என கூறுகிறார். மேலே போட்டோவை தூக்கி போட்டு உடைக்க முயல அகிலன் அதற்குள் அதை பிடிங்கி கொள்கிறார். அதன்பிறகு சௌந்தர்யா அந்த போட்டோ இங்கே தான் இருக்கவேண்டும் என மாட்ட சொல்கிறார்.

இந்தப் பக்கம் கண்ணம்மா சீட்டு காசு வேண்டும் என ஒருவரிடம் போனில் பேசுகிறார். லட்சுமிக்கு நகை எடுத்து வைக்க வேண்டும் என வாய்தா வடிவுகரசி இடம் சொல்ல முதலில் லட்சுமி நன்றாக படிக்க வைக்க நகை சேர்த்து வைத்தது எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். பின்னர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வெளியே பீச்சுக்கு போகலாம் என சொல்ல கண்ணம்மாவும் சரி என கூறுகிறார்.

மறுநாள் காலையில் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் ஸ்கூலில் இருக்கும் போது அவருடைய தோழி ஒருவர் அழுது கொண்டிருப்பதை பார்த்து என்ன ஏது என கேட்கின்றனர். எங்க அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பண்ணிக்கிட்டாங்க இப்போ எங்க அப்பா என் தம்பியை கூட்டிக்கொண்டு தனியா போயிட்டாரு. ஞாயிற்றுக்கிழமை தான் போயிட்டு தம்பியை பார்க்கணுமாம். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என சொல்லி கண் கலங்க ஹேமா அப்போ அப்பாவுக்கும் சமையல் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முதல்ல ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆகி இருக்கணும் என நினைக்கிறார். லட்சுமி அப்பா வீட்டுக்கு வரது இல்ல ஒருவேளை அவரும் அம்மாவை விவாகரத்து பண்ணி விட்டாரா என யோசிக்கிறார். முதல்ல விவாகரத்து நான் என்ன யார் கிட்ட கேட்கிறது சரியா புரியலையே எனவும் யோசிக்கிறார்.

அதன் பிறகு இந்தப் பக்கம் சௌந்தர்யா தன்னுடைய நண்பர் விக்ரம் வருவதால் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்து வைத்து பாரதி, அகிலன் என எல்லோரையும் வீட்டிற்கு வரவைத்து காத்துக்கொண்டிருக்கிறார். விக்ரம் வந்ததும் அவரை வரவேற்று குடும்பத்தாரை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

மூவரும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் என கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். உங்க காலேஜ் வாழ்க்கை பத்தி சொல்லுங்க என்று கேட்க பாரதியின் அப்பா அந்த கதைகளை சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 06.04.22
jothika lakshu

Recent Posts

பைசன்: 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

17 minutes ago

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…

36 minutes ago

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, போட்டியாளர்களின் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

42 minutes ago

Ladies Hostel Pooja & Press Meet

https://youtu.be/x0H-cUHVIic?t=1

3 hours ago

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

1 day ago