பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி. இனியா சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யா ரூமுக்குள் போலீஸ் வர அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஈஸ்வரி செல்வி மற்றும் இனியா ஆகியோர் ஒரு ஹோட்டல் ஒன்றை தேடி கண்டுபிடித்து அங்கே தங்குவதற்காக உள்ளே வருகின்றனர்.

வழியில் ஒவ்வொரு ஆண்களும் ஒவ்வொரு விதமாக இருக்க ஈஸ்வரிக்கு பயம் அதிகமாகிக் கொண்டே போகிறது. பிறகு உள்ளே வந்து இரண்டு ரூம் புக் செய்ய இன்னும் மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் ஈஸ்வரி கஷ்டப்பட பாக்யா கொஞ்சம் தூரம்தான் பொறுமையா வாங்க என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.

ரூமுக்குள் போனது கொஞ்ச நேரத்தில் யாரோ வேகவேகமாக கதவைத் தட்ட பாக்கியா கதவை திறந்து பார்க்க போலீஸ் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு இவர்களிடம் யார் நீங்க எங்கிருந்து வந்தீங்க எதுக்கு வந்தீங்க என கேள்வி கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.

அதன் பிறகு இவர்கள் கிளம்பி செல்ல செல்வியும் ஈஸ்வரியும் பக்கத்தில் இருக்கும் ரூமுக்கு தூங்க செல்கின்றனர். கோபி போன் செய்ய ஈஸ்வரி இங்கே நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்ல அவர் டென்ஷன் ஆகி பாக்கியாவை திட்ட பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராதிகா அலறி எழுந்து கொள்கிறார்.

பிறகு கோபி அம்மாவிடம் பேசிவிட்டு போனை வைக்க ராதிகா நான் பேக் பண்ணி தரேன் நீங்க கிளம்புங்க என்று சொல்ல கோபி எங்கே என்று கேட்க கேரளாவுக்கு தான் உங்களுக்கு தான் நினைப்பு முழுக்க அங்கேயே இருக்கே, அப்படியே போயிடுங்க திருப்பி வராதீங்க என்று சொல்லி பேரதிர்ச்சி கொடுக்கிறார். கோபி இவளும் விரட்டி விட்டா நடு ரோட்டில் தான் நிக்கணும் என புலம்புகிறார்.

அதைத் தொடர்ந்து இனியா அப்பா திட்டிட்டே வந்தார், பாட்டி பயந்துட்டு இருந்தாங்க. டிரைவர் ஓடி போய்ட்டாரு உனக்கு இவ்வளவு தூரம் கார் ஓட்டிட்டு வர பயமே இல்லையா என்று கேட்க ரொம்ப பயம் இருந்துச்சு அதைவிட உன்னுடைய அசைன்மென்ட் ரொம்ப முக்கியம்னு தோணுச்சு அதனாலதான் ஓட்டி வந்தேன் என சொல்ல இனியா சந்தோஷப்படுகிறார்.

Baakiyalashimi serial episode update
jothika lakshu

Recent Posts

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

5 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

5 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

6 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

6 hours ago

பைசன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

6 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்து மீது பழி சொல்லும் அருண் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

7 hours ago