மன்னிப்பு கேட்ட பாக்யா, ஆகாஷ் அப்பா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என்ற முடிவை சொல்ல அனைவரும் எதுவும் பேசாமல் இருக்க பாக்யா அமைதியாக சென்று விடுகிறார்.உடனே ஈஸ்வரி நீ எதுக்கு கோபி இப்ப இந்த முடிவு எடுத்த குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்று சொல்ல செழியன் அவர் எங்க விருப்பப்படுறாரோ அங்கேயே இருக்கட்டும் என்று சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

உடனே ஈஸ்வரி போகக்கூடாது என்பதில் உறுதியாக சொல்ல எல்லா பிரச்சனைக்கும் காரணம் இவதான் இவளால தான் இப்படி ஆச்சு என்று இனியாவை பார்த்து சொல்ல அதற்கு இனியா என்ன கம்பெல் பண்ணா பிடிக்காது அதே மாதிரி நானும் அவரை கம்பெல் பண்ண விரும்பல என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் அதிர்ச்சியாகி ரூமுக்கு செல்கின்றனர் அங்கே கோபி ஈஸ்வரி இடம் என்ன ஒரு நல்ல புருஷன் இல்லாமல் பாக்கியா சொல்லி இருக்கா பாக்யா மட்டும் இல்ல ராதிகாவும் சொல்லி இருக்கா

ஒரு நல்ல பையன் இல்லைன்னு அப்பாவும் சொல்லி இருக்காரு நீங்களும் என்ன சொல்லி இருக்கீங்க ஆனா என்னோட பசங்களுக்கு நான் எப்பவும் ஒரு நல்ல அப்பாவா இருந்திருக்க செழியனோட பிசினஸ் விஷயத்திலும் சரி எழிலோட படம் விஷயத்திலும் சரி என்னால முடிஞ்சத நான் ஒரு அப்பாவா பண்ணியிருக்க இனியாவோட விஷயத்துலயும் இது மாதிரி வேறு யார் வீட்டில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் நம்மளுக்கு தெரியும் ஆனா நான் எந்த விதத்திலும் இனியா மேல கோவப்படல ஏன் இது எப்படி சால்வ் பண்ணலாம் மட்டும் தான் யோசிச்சா ஆனா அவளுக்கு இப்படி ஏன் தோணுது என்று சொல்லி கஷ்டப்படுகிறார் நான் இங்கே இருக்கிறது சரியா வராதுமா என்னோட பிரண்டு மூலமா ஒரு அபார்ட்மெண்ட் பார்த்திருக்கேன் அங்க போய் விடுகிறேன் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அப்போ நானும் உன் கூடவே வந்துடுறேன் அப்படி இல்லன்னா என் ஆசிரமத்துல விட்டுடு என்று சொல்லி அழுகிறார். நீ இல்லாம என்னால இருக்க முடியாது கோபி உனக்கு எந்த நேரத்துல என்ன ஆகும்னு என்னால யோசிச்சுக்கிட்டு இருக்க முடியாது என்று சொல்ல நான் இருக்கும் போது உங்களை எதுக்குமா ஆசிரமத்தில் விடனும் நானே கூட்டிட்டு போறேன் நம்ம போகலாம் என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் ஈஸ்வரி ஹாலிவுட் கலந்து கொண்டிருக்க கோபி வருகிறார் அவரிடம் கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்க வேண்டியது இருக்கு நான் போய் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்ல நானும் வரட்டுமா என்று ஈஸ்வரி கேட்கிறார் வேணாமா நானே போயிட்டு வரேன் என்று சொல்லி வெளியில் வந்து கிளம்ப உடனே ஆகாஷ் அப்பா வந்து நிற்கிறார். அவர் வந்து பேசியவுடன் கோபிக்கு யார் என்று தெரியாமல் இருக்க பிறகு ஈஸ்வரி வந்து உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். ஏழைங்க எல்லாம் உங்க கண்ணுக்கு எப்படி தெரியும் உங்க பெரிய பையன் எங்க என்று கேட்க உடனே ஒவ்வொருவராக வீட்டில் இருந்து வெளியே வருகின்றனர்.

அனைவரும் நீ யார் என்று கேட்க என் பயண அடிச்சு படுக்க வைக்கும் போது தெரியலையே என்று கேட்டவுடன் பிறகு ஆகாஷின் அப்பா என தெரிய வருகிறது. உடனே செழியன் அவன அடிச்சது போதாதா இப்ப நீங்க வந்து இருக்கீங்களா உங்கள அடிக்கவும் தயங்க மாட்டேன் என சண்டைக்கு வர இவரும் அடிச்சு பாரு என்று வருகிறார் உடனே அங்கு இருப்பவர்கள் செழியனை தடுத்து நிறுத்துகின்றனர். உடனே பாக்யா அவரிடம் எங்க வீட்ல பண்ணது தப்புதான் அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று மன்னிப்பு கேட்க ஈஸ்வரி இவங்க கிட்ட எல்லாம் எதுக்கு நீ மன்னிப்பு கேட்டுட்டு இருக்க என்று கேட்கிறார் உடனே ஆகாஷ் அப்பா என் பையன் இவ்வளவு நல்ல பையன் தெரியுமா என்று சொல்லிவிட்டு இனியாவிடம் என் பையன் உன் பின்னாடி சுத்துனானா சொல்லு என்று கேட்கிறார் அதற்கு இனியா இல்லை என்று தலையாட்ட இனிமே என் பையன் மேல கைய வெச்சீங்கன்னா அவ்வளவு தான் என்று சொல்ல ஈஸ்வரி போலீசுக்கு போன் போட சொல்லுகிறார் போடுங்க போலீசுக்கு தானே போடுங்க நானும் சொல்றேன் நடந்தது எல்லாத்தையும் சொல்றேன் யார் பக்கம் நியாயம் இருக்குன்னு சொல்லட்டும் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சியாகி அமைதியாகி விடுகிறார்.

பிறகு ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க பாக்யா செல்வி கிட்ட பேசுகிறேன் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி நீ தான் பேசிக்கணும் இதுக்கு மேல இந்த வீட்ல வேற பிரச்சனை எல்லாத்தையும் நீதான் பாக்கணும் நானும் கோபியும் சேர்ந்து போகப்போகிறோம் என்று விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் செய்ய நீங்க எதுக்கு போறீங்க என்று கேட்க என் பையன் உடம்பு முடியாதுன்னு தனியா விட்டுட்டு என்னால் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

பாக்யா செல்வியை சந்தித்து என்ன பேசுகிறார்? அதற்கு செல்வியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 24-03-25
jothika lakshu

Recent Posts

Mudhal Parvai Lyrical Video

Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

11 hours ago

MANASU THANNALA Lyrical Video

MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…

12 hours ago

Karuppu Aadu Lyrical Video

Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal

12 hours ago

All Pass Teaser

All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…

12 hours ago

Atrocity Music Video

Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…

12 hours ago

100 கிலோ எடையால் அவதி… மனம் திறந்த விஸ்மயா மோகன்லால்!

நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…

13 hours ago