மயூவிற்கு ஆறுதல் சொல்லும் பாக்யா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மயூ சோகமாக ரூமில் இருக்க பாக்யா மயூவை சந்தோஷப்படுத்த காம்பெடிஷன் குறித்து கேட்கிறார் எவ்வளவு பேர் கலந்துக்கிட்டாங்க நீ எப்படி ஃபர்ஸ்ட் பிரைஸ் வந்தாய் என்று எல்லாம் கேட்க ஸ்கூல்ல இருக்குற எல்லாருமே கலந்துக்கிட்டாங்க என்று சொல்லுகிறார் உடனே பாக்யா அவ்ளோ பேர்ல நீ ஃபர்ஸ்ட் வந்தியா சூப்பர் மயூ என்று சொல்லி நான் உனக்கு ஒரு கிப்ட் எடுத்துக்கிட்டு வந்து இருக்கேன் என்று சொல்லுகிறார். ஆனாலும் மகிழ்வேன் முகம் மாறாமல் இருக்கிறது பாக்யா மேஜிக் செய்வது போல் ஸ்வீட் கொடுக்க மறு முகத்தில் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறது. நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு காலையில சாப்பிடுறேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே பாக்யாவிடம் மயூ பாட்டி அப்படி சொன்னாங்க ஆன்ட்டி எனக்கு தெரியும் டாடிக்கு உடம்பு சரியில்லன்னு அவங்கள கடைக்கு கூட்டிட்டு போக கூடாதுன்னு தெரியும் அதெல்லாம் எனக்கு பெருசா தெரியல ஆனா டேடினு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்தது அப்போ நான் டாடி என்று கூப்பிடக்கூடாதா என்று கேட்கிறார்.

உடனே பாக்யா அவங்க சொன்னதெல்லாம் நீ எதுவும் நினைச்சுக்காதம்மா இனியாவுக்கு எப்படி அவர் டாடியோ அதே மாதிரி உனக்கோ அவரு டாடி தான்.நீ அவரை அப்படியே கூப்பிடு என்று சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார்கள் இனியா வருகிறார். என்ன தூக்கம் வரலையா என்று கேட்க இல்லை இங்க தூங்குறதுக்காக தான் வந்தேன் என்று சொல்லுகிறார். உடனே மயூக்கு நீ டிராயிங் காம்பெட்டிஷன்ல ஜெயிச்சதுக்கு கிப்ட் என்று கையில் கொடுக்க மயூ தேங்க்ஸ் என்று சொல்லுகிறார். உடனே மயூவிடம் இனியா சாரி மயூ பாட்டி அப்படி நடந்துப்பாங்கனு நான் நினைச்சு கூட பாக்கல அவங்க பேசுவது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என்று சொல்லி மன்னிப்பு கேட்க பாக்யா பாத்தியா ஏற்கனவே நானோ உங்க அம்மாவும் உன்னோட பக்கம் இருக்கும்போது இப்ப மூணு பேரு இருக்காங்க என்று சொல்லி பேசிவிட்டு மூவரும் தூங்க செல்கின்றனர்.

மறுநாள் காலையில் பாக்யா மண்டபத்தில் சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க செல்வி கோபி சார் கரெக்டா ஆளை கூட்டிட்டு வந்துருவாரா என்று சொல்லி போன் பண்ண சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து எழில் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க பாக்யா நான் தான் உன்ன வர வேணாம்னு சொன்னேன் இல்ல எதுக்கு எழில் வந்தா என்று கேட்க நான் எப்படி வராமல் இருக்க முடியும் என்று பேசிக்கொள்கின்றனர். பாக்கியா செல்வி இடம் நான் போன் பண்ண மாட்டேன் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் எனக்கு அவரோட ஆட்களை வைத்து செய்ய விருப்பம் இல்ல,ஆனா வேற வழி இல்லாம தான் நான் இதை ஒத்துக்கிட்டேன் என்று சொல்ல எழில் அவர் உனக்கு எவ்வளவோ கெட்டது பண்ணிருக்காரு அதுவே இல்லாம இன்னைக்கு ரெஸ்டாரண்டுக்கு ஆள் இல்லாம நீ கஷ்டப்படுறதுக்கோ காரணம் அவர்தான் அதற்கு அவரே செய்யட்டும் பரவால்ல விடுமா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர். உடனே அந்த நேரம் பார்த்து கோபி ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார். முதலில் அவர் வந்து நிற்க பின்னால் இரண்டு செஃப் அதற்குப் பின்னால் இரண்டு வேலை ஆட்கள் என நின்று போஸ் கொடுக்க செல்வி இந்த ஹீரோ எல்லாம் வரும்போது பின்னாடி பௌசர் உங்களை மாதிரி கூட்டிட்டு வராரு என்று சொல்லி கிண்டல் பண்ணுகிறார்.

பிறகு செப்பிடம் பாக்யாவை அறிமுகம் செய்த கோபி பாக்கியாவை பற்றி பெருமையாக பேசி இந்த வேலையை நன்றாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டு செல்கின்றனர். உடனே செல்வி பாக்யா எழில் என டீ குடித்துக் கொண்டிருக்க இப்பல்லாம் சார் உன்னை ரொம்ப பாராட்டி பேசுகிறார் ரொம்பவே மாறிட்டாரு என்று சொல்ல உடனே சார் உள்ள லவ் பண்றாரு என்று சொன்னவுடன் எழில் குடித்துக் கொண்டிருந்த காபி வாயிலிருந்து கீழே விழுகிறது. மறுபக்கம் செப்பிடம் கோபி எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்பதை பிளான் போட்டு சொல்லிக் கொண்டிருக்க செல்வி பாக்யாவிடம் இனிமே உனக்கு வேலை இருக்காதுன்னு நினைக்கிறேன் எல்லாமே சார் முடிச்சு கொடுத்துடுவாரு என்று பேசுகின்றனர். தேவையில்லாம பேசாம போய் வேலையை பாரு என்று திட்டிய அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் ராதிகா கோபிக்கு போன் போட எங்க இருக்கீங்க கோபி என்று கேட்கிறார். பாக்கியாக்கு ஹெல்ப் பண்றதுக்கு ஆளுங்கள கூட்டிட்டு வந்துள்ள அதை கூட இருக்கேன் என்று சொல்ல சரி ஆல கூட்டிட்டு வந்தது சரி விட்டுட்டு நீங்க வர வேண்டியதுதானே என்று சொல்ல என்னோட ஆளுங்க வேலை செய்யும் போது எப்படி விட்டுட்டு வர முடியும், பாக்கியாக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன் என்று சொல்வது மட்டுமல்லாமல் பாக்யாவை பற்றியும் பாக்கியா choose செய்துள்ள டிஷ் கிராமத்து முறையில் இருப்பதாகவும் பெருமையாக பேச ராதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். எப்போ வருவீங்க என்று கேட்க சரியா சொல்ல முடியல ஆனா நைட் ஆயிடும் என்று சொல்லி போனை வைக்கிறார்.

உடனே கோபியிடம் அந்த பாக்யா உங்க ஆளுங்களுக்கு காசு எவ்வளவு கொடுக்கணும்னு பற்றி இன்னும் பேசவே இல்லையே என்று சொல்ல அதப் பத்தி இப்ப எதுக்கு பேசணும் பாக்கியம் ஆனா உன்கிட்ட கேட்டனா என்று சொல்ல இல்ல சும்மா எல்லாம் எதுவும் வேலை பார்க்க வேண்டாம் அப்புறம் பேசிக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.

பிறகு கோபி என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? ராதிகாவிடம் பாக்கியா என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 20-01-25
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

7 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

8 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

9 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

11 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

11 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

11 hours ago