பாக்யா கேட்ட கேள்வி,ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி இடம் யார் வராங்க என்ன விஷயம் என்று ரூமில் கேட்க அதற்கு ஈஸ்வரி இனியாவ பொண்ணு பார்க்க வராங்க என்று சொல்லுகிறார் ஆனால் கோபி எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் அவ படிச்சுக்கிட்டு இருக்கா எதுவுமே தெரியாம எதுக்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கணும் என்று சொல்ல நான் எல்லாமே விசாரிச்சுட்டேன் நான் அப்படி இனியாவது தள்ளிட மாட்டேன் என் மேல நம்பிக்கை இல்லையா நல்லவேளை நல்ல சம்பளம் வெளிநாட்டுக்கு போக கூட வாய்ப்பு இருக்கு என்று சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார்.

அதற்கு கோபி பாக்கியா கிட்ட கூட சொல்லாம எப்படிமா என்று சொல்ல பாக்கியா கிட்ட சொன்னா அவ ஏதாவது பேசி பிரச்சனையை மாத்திடுவா அதனால எதுவும் சொல்லல சாயந்தரம் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லுகிறார். ஆனால் கோபி இனியா இப்பதான் படிச்சிக்கிட்டு இருக்காமா அவ இன்னும் நிறைய படிக்கணும் எனக்கு ஆசை இருக்கு என்று சொல்ல நாம் என்ன இப்ப விவா கல்யாணம் பண்ண போறோம் முதல்ல நிச்சயமா மட்டும் பண்ணுவோம் அதுக்கப்புறம் கொஞ்ச நாள் போகட்டும் படிப்பெல்லாம் முடியட்டும்னு நம்ப கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்லுகிறார். ஆனால் கோபி இனிய ஆகாஷ் கிட்ட பேச மாட்டேனா ஆகாஷ் இனியா கிட்ட பேச மாட்டேனோ சத்தியம் பண்ண தான் பாக்கியா சொல்லி இருக்கா அதனால கொஞ்சம் பொறுமையாவே பார்க்கலாம் என்று சொல்லுகிறார். நான் இனியாக நல்லா கவனிக்கிறேன் அவர் திருப்பியும் ஆகாஷ் கிட்ட பேசுற மாதிரி இருந்தா இத பத்தி யோசிப்போமே என்று சொல்லுகிறார்.

அதற்கு ஈஸ்வரி இனியா ஒன்னும் தப்பு பண்ணாத பொண்ணு கிடையாது ஒரு ஒரு வாட்டி தப்பு பண்ணிட்டு நான் இதுக்கு மேல எந்த தப்பும் பண்ணவே மாட்டேன்னு சொல்லுவா ஆனா அத விட பெரிய தப்பா தான் பண்ணிட்டு வந்து நிப்பா அதே மாதிரி தான் இப்போ வரைக்கும் நடந்துட்டு இருக்கு ஒரு நாள் அந்த ஆகாஷ கல்யாணம் பண்ணிட்டு வந்து மாலையும் கழுத்துமா நின்னா என்ன பண்ணுவ என்று கேட்க நீங்க ஒரு பேச்சுக்கு கூட சொல்லாத எனக்கு மனசே வெடிச்சிடும் போல இருக்கு என்று சொல்ல எனக்கே சொல்ல வாய்ப்பு கூசுது அப்படி நடந்தால் என்ன பண்ணுவ என்று ஈஸ்வரி கோபி இடம் கேட்கிறார். ஈஸ்வரி இப்படி எல்லாம் பேசி கோபி என் மனதை கலைத்து விடுகிறார்.

பிறகு ஹாலில் ஈஸ்வரி மற்றும் கோபி உட்கார்ந்து கொண்டிருக்க இனியா கிச்சனுக்குள் போக அவரை கூப்பிட்டு இது என்ன டிரஸ் ஒரு நல்ல டிரஸ்சா போடு என்ற கேட்கிறார் எதுக்கு பாட்டி என்று கேட்க சொந்தக்காரங்களா வராங்க என்று சொல்ல அவங்க எல்லாம் என்ன பாக்காவா வராங்க என்று கேட்க இருந்தாலும் என்னால டிரஸ் போய் போடு என்று சொல்ல நீயா புது டிரஸ் போட்டு கொண்டு கிச்சனுக்கு வர பாக்யா எதுக்கு இந்த டிரஸ் போட்டுக்கிட்டு இருக்க அந்த கேட்க பாட்டி தான் போட சொன்னாங்க என்று சொன்னவுடன் ஈஸ்வரி இனியாவை கூப்பிட்டு நீ மேல போயிரு நான் சொன்னதுக்கு அப்புறம் வாய் என்று சொல்லுகிறார் உடனே இனியாவும் மேலே சென்று விட கிச்சனிலிருந்து பாக்யா ஈஸ்வரிடம் வந்து பேச வர அதற்குள் இனியாவை பெண் பார்க்க வந்து விடுகின்றனர்.

இதனால் பாக்கியவால் எதுவும் பேச முடியாமல் போய்விடுகிறது. உடனே அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று வரவைத்து பேசுகின்றனர் பிறகு குடும்பத்தினர் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, மற்றவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இனியாவை சரி நம்ம வந்த வேலையை பார்க்கலாம் என்று சொல்ல ஈஸ்வரி ஜெனியிடம் இனியாவை கூட்டிட்டு வா என்று சொல்லும் போது தான் அனைவருக்கும் உண்மை தெரிய வருகிறது. உடனே ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் இனியாவை கூட்டிக்கொண்டு வர அவர்களுக்கு இனியவை பிடித்து விடுகிறது.

நாளைக்கு நாங்க ஊருக்கு போகணும் என்று சொல்ல ஈஸ்வரி உங்களுக்கும் பொண்ண புடிச்சிருக்கு எங்களுக்கும் பையன் புடிச்சிருக்கு நிச்சயம் பண்ணிடலாம் என்று சொல்லி யார் முடிவெடுக்கிறார் பிறகு அனைவரும் அதிர்ச்சியாக, மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் நாளை நிச்சயத்திற்கு சம்மதம் என சொல்லி விடுகின்றனர் பிறகு அவர்களை ஈஸ்வரி அனுப்பிவிட்டு உள்ளே வருகிறார்.

ஈஸ்வரியிடம் குடும்பத்தினர் கேட்கும் கேள்வி என்ன? அதற்கு ஈஸ்வரி பதில் என்ன? பாக்யா என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 18-03-25
jothika lakshu

Recent Posts

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

14 hours ago

Kasivu Movie Press Meet | MS.Bhaskar | Kayal Patti Vijayalakshmi

https://youtu.be/SPNqvVR15cQ?t=1

14 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…

15 hours ago

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…

15 hours ago

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…

15 hours ago