baakiyalakshmi serial episode update 15-05-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் கிச்சனுக்கு வந்த ராதிகா நேத்து இப்படி எல்லாம் நடக்கும் நீங்க எதிர்பார்க்கவே இல்லை தானே என்று கேட்க நேத்து நிறைய நடந்துச்சு நீங்க எத பத்தி கேக்குறீங்க என பாக்கியா கேட்க கோபி உங்கள பத்தி பேசுனது தான். இன்னைக்கு கோபி பேசியிருக்கிறார் இன்னும் போக போக பாருங்க எல்லாரும் பேசுவாங்க என்று சொல்ல எழில் கோபப்படுகிறார்.
நீ இரு எழில் நான் பதில் சொல்லிக்கிறேன் என பாக்கியா தொடங்குகிறார். எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிடுச்சு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து பார்க்கணும் அவரை என்னுடைய மனசுல இருந்தும் என் வாழ்க்கையில் இருந்தும் மொத்தமா தூக்கி போட்டுட்டேன், அவர் பேசுவதை நினைத்து வருத்தப்பட மாட்டேன்.
அவர் எதுக்கு என்னை இன்னும் மனசுல நினைச்சுகிட்டு இருக்காரு அது உங்களுக்கு கஷ்டமா தெரியலயா? இது உங்களுடைய வாழ்க்கை கொஞ்சம் யோசிச்சு பாருங்க என ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் பாக்யா.
அதற்கு அடுத்ததாக கோபி வாக்கிங் செல்ல எழில் வாக்கிங் செல்ல வழியில் சந்திக்கும் கோபி எழிலிடம் உங்க அம்மா எதுக்கு அவன் வீட்டுக்கு போகணும்? எதுக்கு சிரிச்சு சிரிச்சு பேசணும் இதெல்லாம் தப்பாவே தெரியலையா என கேட்க அவங்க என்னமோ பண்ணிக்கிட்டு போறாங்க உங்களுக்கு என்ன? அத பத்தி நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க நீங்க எதுக்கு கேக்குறீங்க என கேட்க நான் கேட்காம வேற யார் கேட்பா என கோபி பதில் கொடுக்கிறார்.
செழியன் உங்கள அடிக்க வந்தான், நானா இருந்தா அடிச்சு இருப்பேன் என பதிலடி கொடுக்கிறார். சும்மா தேவையில்லாமல் என்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்காதீங்க நான் இதே மாதிரி பேசிக்கிட்டே இருக்க மாட்டேன் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார் எழில்.
பிறகு ஜெனி ரூமில் இருக்க செழியன் அவரிடம் வந்து பேசிக்கொண்டே கால் அழுத்திக் கொண்டிருக்க செழியன் கிளைன்ட் விடாமல் போன் செய்ய கடுப்பாகி செழியன் ஒரு கட்டத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். பிறகு பிறகு ஜெனிக்காக ஜூஸ் எடுத்துச் செல்ல கீழே வருகிறார்.
கீழே கோபி ராதிகா செய்து கொடுத்த ஸ்வீட்டை சாப்பிட்டு கொண்டு பேசிக்கொண்டே ராதிகாவுக்கு ஊட்டிவிட அதைப் பார்த்த செழியன் கடுப்பாகி வெளியே செல்கிறார். செழியன் பார்த்து விட்டதை பார்த்த கோபி எழுந்து ரூமுக்குச் செல்ல பிறகு இருவரும் நேருக்கு நேராக பார்த்து முறைத்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor