baakiyalakshmi serial episode update 04-01-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அமிர்தா அசந்து தூங்கிக் கொண்டிருக்க எழில் அவரை டிஸ்டர்ப் செய்யாமல் எழுந்து ரெடியாகி விடுகிறார். திடீரென சத்தம் கேட்டு அமிர்தா கண்விழிக்க எழில் சாரி சொல்லி நீ தூங்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என வெளியே வருகிறார்.
எழில் நேராக கிச்சனுக்கு வந்து அம்மாவுக்கு குட்மார்னிங் சொல்ல பாக்யா காபி கொடுக்கவா என்று கேட்க கொடுமா, ஹாலுக்கு எடுத்துட்டு வந்து நாங்க இருக்கேன் என்று சொல்லி இங்கு வந்து காட்டுகிறார். இதில் எல்லாவற்றையும் மறந்து சாதாரணமாக சகஜமாக எல்லோரிடமும் பேச அதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
பிறகு செழியன் வந்து உக்காந்து ஓகேவா என்று கேட்க எழில் நான் ஓகே தான்டா என்று கூறுகிறார். பிறகு நீ எங்க ஆபீஸ் கிளம்பிட்டியா என்று கேட்க இல்ல கோர்ட்டுக்கு இன்னைக்கு இயரிங் இருக்கு என்று சொல்லுகிறார்.
அதை தொடர்ந்து எழில் அப்ப நானும் உன் கூட வரவா என்று கேட்க பாக்கியா இல்ல வேண்டாம் நான் செய்யணும் போயிட்டு வரும் என்று சொல்ல ஈஸ்வரி நானும் வரேன் என்று சொல்கிறார் அது இல்லாம கோபியும் வரட்டும் என்று சொல்ல கோபி உடன் வருவதாக கூறுகிறார். பிறகு ராதிகாவிடம் வந்து கோர்ட்டுக்கு போயிட்டு வரேன் அம்மா பாக்கியா கூட வராங்க என்று சொல்ல ரொம்ப ஓவரா ஒட்டிக்காதீங்க அப்புறம் நாளைக்கு ஒரு பிரச்சனைனு வந்தா உங்க பிள்ளைங்க பாக்கியா பக்கம் போய் நின்னாங்கனா அப்போ நீங்க தான் ரொம்ப வருத்தப்படுவீங்க என்று எச்சரிக்க கோபி இப்ப நான் போகவா வேண்டாமா என்று கேட்க அதான் வரேன்னு சொல்லிட்டீங்கல போய்ட்டு வாங்க ஆனா இதுவே கடைசியா இருக்கட்டும் என்று சொல்லி அனுப்ப இவன் நல்லவளா கெட்டவளா என்று புரிஞ்சுக்க முடியல என்று புலம்புகிறார்.
அடுத்து இவர்கள் எல்லோரும் கோர்ட்டுக்கு வர ஜெனி அப்பாவுடன் வருகிறார். அவருடைய அப்பா யாரிடமும் பேச விடாமல் ஜெனியை கூட்டிச் சென்று விட ஈஸ்வரி அவளுக்கு செழியன் மேல தானே கோபம் நம்ம கிட்ட பேசி இருக்கலாம் இல்ல என்று கோபப்படுகிறார்.
இங்கே வீட்டில் நிலா பாப்பா ராமமூர்த்தியை பயன்படுத்தி அவருடன் ஒட்டிக்கொண்டு அதைக் கேட்டு விளையாடிக் கொண்டிருக்க அதை பார்த்த மாதிரி தான் எமோஷன் ஆகி மேலே சென்று விடுகிறார். பிறகு உள்ளே வரும் ராதிகா தன்னுடைய விவாகரத்து கதையை சொல்லி உனக்கும் இனிமே எழிலோடு தான் வாழ்க்கை, கணேஷ் வந்தது எனக்கும் சந்தோஷம்தான் ஆனால் அவர் உங்க அம்மா அப்பாவோட சந்தோஷமா இருக்கட்டும் அவருக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கட்டும். நீ எதைப் பற்றியும் கவலைப்படாம எப்பயும் போல சந்தோஷமா இரு என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…