baakiyalakshmi serial episode update 01-08-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்கியாவால் எல்லோரும் உற்சாகமடைகின்றனர். குளிக்கப் போன பாக்கியாவை பார்த்து கோபி அதிர்ச்சடைகிறார். உள்ளே போனதும் பாக்யா கோபியை வெளியே போக சொல்கிறார். குளிச்சிட்டு டிரஸ் மாத்தணும் என சொல்ல கோபி வெளியே வந்து விடுகிறார்.
இந்தப் பக்கம் ஈஸ்வரி பாக்கியா வந்த சந்தோசத்தில் இனி கோபியை ஒழுங்கா நடந்துக்க சொல்லணும் வேற நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடணும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி பேச்சை எல்லாம் கேட்டு கோபியின் அப்பா கடுப்பாகிறார். எல்லாம் சரியாகிற நேரம் என கூறுகிறார். ஜெனி நீ எப்பவும் பாக்கியா கூடவே இருக்கணும் அவ மனசை பேசி பேசி நாம தான் மாத்தணும் என ஈஸ்வரி கூறுகிறார்.
இந்தப் பக்கம் கிச்சனில் செல்வி பாக்கியா அக்கா இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கக் கூடாது. தப்பு பண்ணிடுச்சு என சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போய் இருக்கணும். இதுக்கு அப்புறம் என்ன பண்ணும் கிச்சனுக்கு வந்து சட்னி செய்யலாமா சாம்பார் செய்யலாமானு பேசிட்டு இருக்கும். மத்தவங்க எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போயிட்டு வாங்க பாக்கியா அக்காவோட மனசுல இருக்க கஷ்டம் யாருக்கும் தெரியாது. அக்கா மட்டும் வந்து பழையபடி இருந்தா நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் கிளம்பி போயிடுவேன் என கூறுகிறார்.
பிறகு குளித்துவிட்டு வெளியே வந்த பாக்கியா பட்டுப் புடவை கட்டிக்கொண்டு மேக்கப் எல்லாம் போட்டு டிப் டாப்பாகக ரெடியாகி கீழே வருகிறார். பாக்யாவை பார்த்து கோபி அதிர்ச்சி அடைந்து நிற்க ஈஸ்வரி எங்க கோவிலுக்கு போறியா கோபி நீயும் கூட போயிட்டு வா என கூறுகிறார். நேராக வெளியே போன பாக்கியா பைக்கில் இருந்து வக்கீல் நோட்டீஸ் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து கோர்ட்டில் இருந்து வந்துச்சு. இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும்ல என கூறுகிறார். இதனால் குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor