Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி டிரைவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒழுங்கா உஷாரா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும் என வார்னிங் கொடுத்து எல்லோரையும் அனுப்பி வைக்க செல்வி வழக்கம் போல கலாட்டா செய்து கொண்டு வர டிரிப் ஜாலியாக தொடங்குகிறது.
தாம்பரத்தை கடந்து வந்த பிறகு திடீரென டிரைவருக்கு ஒரு போன் கால் வர போனை அட்டென்ட் செய்த போது அவருடைய அப்பாவுக்கு ஆக்சிடென்ட் என தெரியவந்து அவர் கூட யாருமே இல்லை என்ற பதற்றத்தோடு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி வருகிறார். இதனால் ஈஸ்வரி டிரைவர் இல்லாமல் எப்படி போறது ஒரு வாரம் வெயிட் பண்ணி நீ கோபியோடவே போய் இருக்கலாம். அவதான் அடம் பிடிக்கிறானா நீயும் அவ கூட சேர்ந்து ஆடுற என பாக்யாவை பிடித்து திட்ட கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அத்தை என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று எழில், செழியன் என இருவருக்கும் போன் செய்ய இருவரும் போனை எடுக்காமல் இருக்கின்றனர்.
மறுபக்கம் கோபி மயூவுக்கு தங்க நகை கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். அடுத்ததாக கொஞ்ச நேரம் யோசித்து பாக்யா டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய ஈஸ்வரி நீயா ஓட்ட போற என பதறுகிறார். வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் பாக்யா காரை எடுக்க ஈஸ்வரி கண்ணை மூடிக்கொண்டு பயத்தில் ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து இங்கே விருந்தினர்கள் எல்லோரும் வர மயூவை தயார் செய்து விழா மேடைக்கு அழைத்து வருகின்றனர். புடவையில் மயூவை பார்த்த கோபி வியந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…