ராதிகா வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி.. ராதிகாவிடம் பேசிய கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டிற்கு சென்றுள்ள கோபி உனக்காக தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். உனக்காகத்தான் டிவோர்ஸ் வாங்கினேன். உன்கிட்ட சில விஷயங்கள் மறைச்சிருந்தாலும் உன் மேல நான் வச்சிருக்கேன் அன்பு உண்மையானது அதில் எந்த பொய்யும் கிடையாது. தங்குவதற்கு தூங்குவதற்கு இடம் இல்லாமல் தவிச்சிட்டு இருக்கேன். எனக்கு இருக்க ஒரே நம்பிக்கை நீ தான். நல்லா யோசிச்சு ஒரு முடிவா சொல்லு என கோபி இங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு வர கோபி உள்ளே இருந்து வெளியே செல்வதை பார்த்து அதிர்ச்சடைந்து ராதிகா வீட்டுக்குள் சென்று சத்தம் போடுகிறார். என் பையன் மேல தான் நான் அதிகம் கோபப்பட்டேன் அவனால ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை நாசமா போச்சுன்னு கஷ்டப்பட்டேன் ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தவன் நேரா இங்க வரானா என்ன அர்த்தம் இதுக்கெல்லாம் நீயும் உடந்தையா திட்டம் போட்டு எல்லாத்தையும் பண்ணியா என கோபப்படுகிறார். ராதிகா நடந்த விஷயங்களை சொல்ல முயற்சி செய்தும் கிராம மூர்த்தி பேச விடாமல் கோபப்பட்டு பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் ராதிகாவின் அண்ணன் சும்மா நிறுத்துங்க உங்க பையன் என்ன தப்புக்காக எல்லாரும் இங்க வந்து கத்துக்கிட்டு இருக்காதீங்க. கோபி எதுக்காக வந்தாரு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க. பாக்கியா தான் அவருடைய மனைவின்னு தெரிஞ்சதும் ராதிகா அவரை விட்டு விலக எவ்வளவு முயற்சி செய்தார் ஆனால் அவர்தான் விடாம இங்க வந்துட்டு இருக்காரு. நீங்க எதுவாக இருந்தாலும் உங்க பையன் கோபி கிட்ட பேசுங்க என சொல்ல அசிங்கப்பட்டு நிற்கும் ராமமூர்த்தி இருவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வருகிறார்.

பிறகு ராதிகாவின் அண்ணன் இவங்க எல்லாரும் கொடுக்கிற டார்ச்சர் தான் கோபி இங்க வந்ததுக்கு காரணம் அவர் ரொம்ப பாவம் என சொல்ல ஒரு விதத்துல நீ சொல்றதும் உண்மைதான் என ராதிகா கூறுகிறார். இதனால் ராதிகாவின் மனம் மாறுகிறது.

வீட்டில் பாக்யா எல்லோருக்கும் சாப்பிட தோசை வைத்துள்ள நிலையில் யாரும் சாப்பிடாமல் ஒவ்வொருவராக கோபமாக எழுந்து சென்றுவிட ராமமூர்த்தி அவங்கள பத்தி எல்லாம் கவலைப்படாத எவ்வளவு நாளைக்கு இப்படி சாப்பிடாம இருக்க முடியும்? என ராதிகா வீட்டில் நடந்த விஷயத்தை மனம் வருந்தி எதுவும் வெளியில் சொல்லாமல் அவரும் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார்.

பிறகு பாக்கியா வருத்தத்தோடு இருக்க எழில் பால் எடுத்து வந்து கொடுத்து அவரை குடிக்க சொல்லி ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

24 minutes ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

33 minutes ago

குழந்தை பிறப்பை முன்கூட்டியே திட்டமிட்ட சமந்தா… வைரலாகும் பழைய பேட்டி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…

1 hour ago

‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்… அஸ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

1 hour ago

‘கருப்பு’ படத்திற்கு விஜய் தான் முதல் காரணம்… சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…

1 hour ago

மீண்டும் இணையும் ‘பிரேமம்’ கூட்டணி… நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…

1 hour ago