தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா கிச்சனில் இருக்கும் போது செல்வியிடம் சேர்ந்து வாழும் போது தான் என்ன பிடிக்காது எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டுகிட்டே இருப்பாரு, இப்போ விவாகரத்து வாங்கி தனித்தனியா பிரிஞ்சாச்சு. இப்போ எதுக்கு என்ன கேள்வி கேட்கணும் இனிமே அவர் ஏதாச்சு கேட்டா நான் சும்மா இருக்க போறது இல்ல ஏதாவது பண்ணி விட போகிறேன் என்று கோபி மேல் இருக்கும் கோபத்தை செல்வியிடம் காட்டுகிறார்.
அதன் பிறகு செல்வி உனக்கு பிடிச்சிருந்தா பழனிச்சாமியை கல்யாணம் பண்ணிக்க அக்கா என்று சொல்ல பாக்யா அவர் நல்ல பிரண்டாவே இருக்கட்டும் என சொல்கிறார்.
அடுத்து செழியன் மொட்டை மாடியில் இருக்க அங்கு வரும் எழில் செழியனுக்கு நன்றி சொல்ல இதுக்கெல்லாம் எதுக்குடா நன்றி என்று பேசிக்கொண்டு இருக்க கோபியும் அங்கு வர எல்லா பிரச்சனைக்கும் பாக்கியா தான் காரணம் என்று சொல்ல இருவரும் கோபியை திட்டிவிட்டு கீழே வந்து விடுகின்றனர்.
பிறகு கோபி ராதிகாவிடம் வந்து விஷயத்தை சொல்லி என் புள்ளைங்க என்னை மதிக்கவே மாட்டறாங்க அம்மா பக்கம்தான் சாயறாங்க என்று சொல்லி வருத்தப்பட உங்களுக்காக நான் இருக்கேன் என்று ராதிகா ஆறுதல் சொல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம் என ஆபிஸை க்ளோஸ் பண்ண விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுத்து சொல்ல வர அந்த நேரம் பார்த்து ராதிகாவுக்கு ஒரு மெசேஜ் வருகிறது.
பிறகு ராதிகா என் சொந்தக்கார பையன் ஒருத்தன் வேலை கேட்டான் உங்களுக்கு தெரிஞ்ச ஆஃபீஸ் ஏதாவது இருந்தா ரெபர் பண்ணுங்க என்று கூறுகிறார். இதனால் கோபி உண்மையை சொல்ல முடியாமல் நிறுத்தி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து மறுநாள் பாக்யா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க போகும் விஷயத்தை எல்லாரிடமும் சொல்லி ராமமூர்த்தியிடம் நாள் குறிக்க சொல்கிறார். இதைக் கேட்டு அப்செட் ஆன கோபி மேலே வந்து ராதிகாவிடம் விஷயத்தை சொல்லி பேசாம நான் கூட ஒரு கேட்டரிங் பிசினஸ் பண்ணியிருக்கலாம் போல என்று சொல்ல உங்க பிசினஸ்ல என்ன பிரச்சனை சொல்லுங்க நான் உதவி பண்றேன் இன்னைக்கு நான் ஈவினிங் உங்க ஆபீஸ்க்கு வரேன் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி அதெல்லாம் வேண்டாம் ஒரு மாசத்துல எல்லா பிரச்சனையும் நானே சால்வ் பண்ணி விடுவேன் என்று சமாளிக்கிறார். கோபி ஆபீஸ் விஷயத்தில் பதட்டம் ஆவதை பார்த்து ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…