“ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும்”. நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் விளக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனர் ஹேமந்த், “இசை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற அனைத்து விசயங்களுக்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம். சமீப நாட்களாக ஒரு சில பேர் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானை தாக்கி பதிவிட்டு வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானுக்கும் இந்த அசவுகரியங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை தாக்க வேண்டாம். மேலும், இந்த இசை நிகழ்ச்சிக்கு பணம் செலுத்தி பங்கேற்க முடியாதவர்களுக்கு மிக விரைவில் பணம் திருப்பி செலுத்தப்படும்” என்று பேசினார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட்டியின் நகலை உரிய இமெயில் ஐடிக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரிபார்த்து அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணியில் நேற்றிரவில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.

 

jothika lakshu

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

12 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

19 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

19 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

20 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

22 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago