நடிகை மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துக்களை பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் போலீசாருக்கு சவால்விடும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று சென்னை அழைத்து வரப்பட்ட அவரை வேப்பேரியில் உள்ள கமி‌ஷனர் அலுவலகத்திற்குள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வேனில் இருந்து இறங்கியதும் நடிகை மீரா மிதுன் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து, போலீசார் அராஜகமாக நடந்து கொள்கிறார்கள். துன்புறுத்துகின்றனர். கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக சாப்பாடு வாங்கி கொடுக்கவில்லை என்று கூறியபடி சென்றார்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Suresh

Recent Posts

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

13 hours ago

“தேர்தலுக்கு முன் கூறிய விமர்சனங்களுக்கு வருந்துகிறேன்” – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சேரன்

தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை…

13 hours ago

ரசிகர்களை கவரும் “காவிய காதல்” டைட்டில் அறிவிப்பு வீடியோ!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மத்தியில்…

13 hours ago

ராம் சரண் நடித்த “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணி நிறைவு!

தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையாக…

13 hours ago

மே 22 முதல் ZEE5-ல் வெளியாகும் “வாரண்ட்” தொடர்!

“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே…

13 hours ago

29 Official Trailer

29 Official Trailer | Vidhu, Preethi Asrani | Sean Roldan | Rathna Kumar | Kaarthikeyan…

17 hours ago