மாணவர்களிடம் வெற்றி தோல்வி குறித்து பேசிய விஜய் சேதுபதி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

கோலிவுட் திரையுலகில் ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது பேச்சு மற்றும் நடிப்பு திறமையால் பல படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மேலும் மற்ற ஹீரோக்களை போல் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்தையும் மிரட்டலாக நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார். இவ்வாறு தனித்துவமாக விளங்கும் விஜய் சேதுபதி அண்மையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாடி இருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப்போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டுமே என்றார் அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் அதை நாம் நன்றாக கவனித்து கேட்க வேண்டும். பள்ளி, கல்லூரி எல்லாம் அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து, புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடமாக ஆக்கியது தான். அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.

அதற்கு பெயர் தான் பகுத்தறிவு. அது கடவுளாக இருந்தாலும், சக மனிதனாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, கருத்தைப் பாருங்கள், கருத்து சொன்னவரை பார்க்காதீர்கள். கருத்து உங்களுக்கு பயன்படுகிறதா என்பதை மட்டும் பாருங்கள். புரிந்து கொள்ளும் திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கண்ணதாசன் சொன்னது போல் ‘தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா’ என்ற பாடலின்படி, தன்னை உணர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். நாம் தான் சிறந்த புத்தகம். என்று சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

actor vijay sethupathi speak about success and failure
jothika lakshu

Recent Posts

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

11 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

11 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

11 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

11 hours ago

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…

11 hours ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

1 day ago