ஈரோடு மகேஷுக்கு புதிய மகுடம்! சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்திற்கு வசனம்!

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் பல வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்து, தற்போது நடுவராகவும் ஜொலிப்பவர் ஈரோடு மகேஷ். காமெடி தொகுப்பாளர் என்பதைத் தாண்டி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளராகவும் பல கல்லூரிகளில் தொடர்ந்து தனது பணியை செய்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனும், ஈரோடு மகேஷும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையைத் தாண்டி, 2012ஆம் ஆண்டு ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் நடிகராகவும் பரிணாமம் எடுத்த ஈரோடு மகேஷ், சில படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டியுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு மகேஷின் திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நாளை (மே 16) திரைக்கு வரவிருக்கும் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைந்து இப்படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை ஈரோடு மகேஷ் எழுதியுள்ளார். சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூரி இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

சூரியின் இந்த அறிவிப்பு ஈரோடு மகேஷுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. நகைச்சுவை உணர்வு நிரம்பிய தொகுப்பாளராகவும், பேச்சாளராகவும் அறியப்பட்ட அவர், தற்போது வசனகர்த்தாவாகவும் தனது திறமையை வெளிப்படுத்தவுள்ளார். ‘மாமன்’ படத்தில் சூரியின் நகைச்சுவைக்கு ஈரோடு மகேஷின் வசனங்கள் மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் தனது நகைச்சுவை திறமையால் மக்களை கவர்ந்த ஈரோடு மகேஷ், வெள்ளித்திரையிலும் வசனகர்த்தாவாக தனது முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

A new crown for Erode Mahesh
jothika lakshu

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

15 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

15 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

16 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

16 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

16 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

17 hours ago