இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன். இந்தியாவில் சென்றவர்களுக்கு இலங்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எப்படி இலங்கை அணியில் சேர்ந்தார். கிரிக்கெட் அணியில் உள்ள பிரச்சனை மற்றும் இலங்கையில் உள்ள அரசியல் ஆகியவற்றை எப்படி கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் என்பதை இப்படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதுர் மிட்டல் முடிந்த வரை முத்தையா முரளிதரனாக நடிக்க முயற்சித்துள்ளார். அவரது உடல் மொழி, முக வெளிப்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் மகிமா நம்பியார் சிறிது நேரம் மட்டுமே வந்து மனதில் நிற்கிறார். நாசர், ஹரி கிருஷ்ணனின் நடிப்பு பதத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நரேன், திரையில் வரும் போது விசில் பறக்கிறது.

படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை முடிந்த வரை சினிமா படமாக்கி இருக்கிறார். பலருக்கும் தெரியாத முத்தையா முரளிதரன் கடந்து வந்த பாதையை அழகாக சொல்லி இருக்கிறார். இலங்கை அணியில் அவர் சேர்வதற்கு ஏற்பட்ட பிரச்சனை, சேர்ந்த பிறகு விளையாட்டில் உள்ள அரசியல், பந்தை எரிகிறார் என்று புகார் வந்தவுடன் அவர் எதிர் கொண்ட சவால், போர் பிரச்சனையில் இருக்கும் போது அவரின் மனநிலை என திரைக்கதையை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.

ஜிப்ரானின் இசை படத்திற்கு பெரிய பலம்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றார் போல் படம் பிடித்து இருக்கிறது.படத்தொகுப்புபிரவீன் கே.எல். நேர்த்தி.பூர்த்தி பிரவின் மற்றும் விபின் பி.ஆர். காஸ்டியூம் டிசைன் சிறப்பு.மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘800’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. “,

800 movie review
jothika lakshu

Recent Posts

IRUMUDI KATTU Lyric Video

IRUMUDI KATTU Lyric Video | Ravi Teja | GV Prakash | Ananthu | Shiva Nirvana…

1 hour ago

LA LA LA Promo Song

LA LA LA Promo Song | Mr.Bhaarath | Niranjan | Santhosh Narayanan | Pranav Muniraj…

1 hour ago

“என்னால் முடிந்திருந்தால் என் ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு கொடுத்திருப்பேன்…” – உருக்கமாக பேசிய சாந்தனு!

பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர்…

11 hours ago

சமந்தாவின் “மா இன்டி பங்காரம்” படத்தின் 2-ம் பாகம் அறிவிப்பு

ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம்…

12 hours ago

மகள் திருமண புகைப்படத்துக்கு எதிர்ப்பு… நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக…

12 hours ago

“என் கணவரைவிட உங்களை அதிகம் நேசிக்கிறேன்!” – ரசிகையின் வார்த்தையால் வெட்கப்பட்ட ஷாருக்கான்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர்…

12 hours ago